எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் சீர்மிகு திட்டங்களில் ஒன்றான பள்ளி மாணவ,மாணவியருக்கு விலையில்லா மிதிவிண்டிகள் வழங்கிடும் திட்டத்தின் கீழ் தற்போது தமிழகம் முழுவதிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரிலுள்ள பி.கே.என் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,திருமங்கலம் ஒன்றியத்தில் உள்ள மேலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி,அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,அம்மாபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,ஜோதி தர்மர் அசிசி மேல்நிலைப்பள்ளி,அரசு கள்ளர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,ஸ்ரீமீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,அரசு கள்ளர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி,கப்பலூர் தியாகராஜர் ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தமிழக அரசின் சார்பில் மாணவ,மாணவிகள் 3000 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும் விழாக்கள் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.வட்டாட்சியர் தலைமை வகித்தார். திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன் ஆகியோர் வரவேற்று பேசினார்கள்.ஏராளமான மாணவ,மாணவியர் பங்கேற்று பயனடைந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமங்கலம் நகரம்,ஒன்றியத்திலுள்ள மேற்கண்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ,மாணவியர் 3000 பேருக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிடும் விழாவுக்கு வருகை தந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு மாணவ,மாணவிகள் கரவொலியெழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இவ்விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்: மாணவ,மாணவியரின் கல்வித் தரத்தை மேம்படுத்திடும் வகையில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மடிகணிணி,விலையில்லா சைக்கிள் மற்றும் 14வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.மாணவ,மாணவியருக்காக அம்மா செல்படுத்தி வந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவதுடன் தற்போது கூடுதலாக பல்வேறு சிறப்பு மிகு திட்டங்களை முதல்வர் எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார்.இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் நல்லாட்சி நடத்திடும் நாடு அது அன்னைத் தமிழ்நாடு என நாட்டில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
இது ஒட்டு மொத்த தமிழினத்திற்கு கிடைத்த பெருமை.அதே போல் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.27ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வித்துறையில் முன்னோடி மாநிலமாக அன்னைத் தமிழகம் திகழ்கிறது.மேலும் மக்களின் மனநிலை புரிந்து செயல்படும் அரசாக அம்மாவின் அரசு திகழ்கிறது.அதனால் தான் மக்கள் மற்றும் மாணவ,மாணவியரின் உணர்வுகளை புரிந்து கொண்டு 5ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அரசாணையை தாயுள்ளத்துடன் தமிழக முதல்வர் ரத்து செய்துள்ளார்.இதன் மூலம் புரட்சித்தலைவர் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் அனைவரும் பாஸ் என்கிற நிலை தற்போதும் தொடர்கிறது.எனவே தமிழக அரசு வழங்கிடும் நலத்திட்டங்களை மாணவ,மாணவியர் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாக்களில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன்,மாவட்ட கல்வி அலுவலர் இந்திராகாந்தி,முன்னாள் எம்.எல்.ஏ.,தமிழரசன்,மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மதுரை புறநகர் மாவட்ட மாவட்ட துணை செயலாளர் பி.அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் யூனியன் சேர்மன் லதாஜெகன்,துணை சேர்மன் வளர்மதிஅன்பழகன்,திருமங்கலம் நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் திருமங்கலம் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் ஆண்டிச்சாமி,நிலவள வங்கி தலைவர் கபிகாசிமாயன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன்,ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி, துணைச் செயலாளர் சுகுமார், சுமதிசாமிநாதன் ஒன்றிய கவுன்சிலர்கள் மின்னல்கொடி,செல்வம்,பரமன்,சிவபிரியா,முத்துப்பிள்ளை, வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,துரைப்பாண்டி,வாசிமலை கட்சி நிர்வாகிகள் கொடிவைரன்,சிவன்காளை,சிவகுமார்,கட்டாரி வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமானேர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.