முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை முதல் 13-ம் தேதி வரை நடக்கும் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் - நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். வேண்டுகோள்

சனிக்கிழமை, 8 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. வளர்ச்சி பணிகள் குறித்து நாளை 10-ம் தேதி முதல் வரும் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அ.தி.மு.க. வளர்ச்சி பணிகள் குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்குபெறும் ஆலோசனை கூட்டம் தலைமை கழகத்தில் நாளை 10-ம் தேதி முதல் வரும் 13-ம் தேதி வரை தினமும் காலை, மாலை என இருவேளைகளிலும் மாவட்டம் வாரியாக நடைபெறும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய செயலாளர்களும், நகர செயலாளர்களும் மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த பகுதி செயலாளர்களும் தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து