எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம் : மக்களை நேரில் சந்திக்க துணிவின்றி இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்கிறார்கள் என்று தி.மு.க.வை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மறைமுகமாக தாக்கி பேசினார்.
சேலம் மாவட்டம் தலைவாசலில் நேற்று நடந்த 900 ஏக்கரில் ரூ.1022 கோடியில் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசியதாவது,
நாம் அன்பு காட்டுகின்ற கால்நடைகளை, மிகப் பழமையான செல்வ வடிவமாக மக்கள் கொண்டிருந்தனர். காரணம், இந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல. மரங்கள், விலங்குகள், பறவைகள்என, அனைத்திற்கும் சொந்தமானது என்று, தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள். பூவுலகைக் காக்க அவதாரம் எடுத்த ஸ்ரீ கிருஷ்ணர், பசுக்களின் கூட்டத்தைப் பாதுகாக்கும் தலைவராக இருந்து அருள்பாலித்தார்.இயேசுபிரான் நல்லமேய்ப்பராக இருந்து, தன்னிடம் இருக்கும் 100 ஆடுகளில் ஒன்றுகாணமால் போனாலும் அதைக் கண்டுபிடிக்கும் வரை ஓயலாகாது என உவமை சொன்னார். மிருகங்களைப் பாதுகாப்பவர்களுக்கு அல்லா நற்கூலி கொடுப்பார் என்று கூறினார் நபிகள் நாயகம். அவர்கள் காட்டிய வழியில்தான், அம்மாவும் மிருகங்கள் மீதும், செல்லப் பிராணிகள் மீதும், கால்நடைகள் மீதும் கொள்ளைப் பிரியம் வைத்து அன்பு காட்டினார். இந்தியாவிலேயே முதன்முதலாக அம்மா, யானைகளுக்கு புத்துணர்ச்சி முகாம் ஏற்பாடு செய்ததும், மிருகவதை கூடாது என்று கூறியதும் இதன் அடிப்படையில்தான். கால் நடைகள் செழிக்க வேண்டும், கிராமப் பொருளாதாரமும் உயரவேண்டும், கிராமப்புறப் பெண்களின் வாழ்வும் வளம் பெறவேண்டும் என்னும் மூன்று நோக்கங்களையும் நிறைவேற்றும் வகையில், விலையில்லாக் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும், விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தையும் அம்மா வெற்றிகரமாக செயல்படுத்தினார். அம்மா அரசின் அனைத்து துறைகளும், ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக் கொண்டு சாதனைகளைப் படைத்து வருகின்றது. இவ்வாறு சாதனை படைத்துக் கொண்டிருக்கும் அரசின் மற்ற துறைகளுக்கு, தான் சற்றும் சளைத்தது இல்லை என்கிற வகையில், கால்நடை பராமரிப்புத் துறை சாதனைக்கு மேல் சாதனைகளைப் படைத்து வருகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே இருந்த 2 கால்நடை மருத்துவக் கல்லூரிகளோடு, ஒரத்தநாடு மற்றும் திருநெல்வேலியில் அம்மாவால் 09.10.2012 அன்று இரண்டு புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் துவங்கப்பட்டன. தற்போது ஐந்தாவதாக, 01.11.2019 அன்று ஆணையிடப்பட்டு, தலைவாசலில் புதியகால் நடைமருத்துவக் கல்லூரி துவக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அம்மா அரசால் கால்நடைகளின் எண்ணிக்கையைப் பெருக்கவும், அவற்றை நோய்களிலிருந்து பாதுகாக்கவும், தடுப்பூசிகள் வழங்குவது உட்படபல விதமானவசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் சிறப்பாகச் செயலாற்றியமைக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் தலை சிறந்த விருதை பெற்றுள்ளது என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன் . தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி மிக விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இது சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கால்நடைகளுக்கும் கால்நடைப் பண்ணையாளர்களுக்கும், கால்நடை ஆர்வலர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும்.
இப்படி, துறைகள்தோறும் சாதனை, மாவட்டங்கள் தோறும் சாதனை, மாநிலம் முழுவதும் சாதனை என்று சாதனை மேல் சாதனை படைத்து வந்தாலும், எதிர்க்கட்சிகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாராட்டமனம் வரவில்லை. குறை சொல்லும் தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளவும் அவர்கள் தயாராக இல்லை. மக்களுக்காகவே தன் சிந்தனையைச் செலவு செய்தார் தந்தை பெரியார். மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களிடம் செயல்படுத்து என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. மக்களே எஜமானர்கள், மக்கள் புத்திசாலிகள். அவர்கள் மறதிப் மனிதர்கள் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். ஏமாந்து போவார்கள் என்றார் எம்.ஜி.ஆர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்றார் அம்மா. ஆனால் இன்றைக்கு சில பேர் மக்களை மறந்து விட்டு, அவர்களை நேரில் சந்திக்கத் துணிவின்றி, என்ன சொல்லி மக்களை ஏமாற்றலாம்? என்ன செய்து அவர்களது கண்களை கட்டி வாக்குகளை கபளீகரம் செய்யலாம் என்று திட்டம் போட்டுத் தரச் சொல்லி, இரவல் மூளைகளிடம் யாசகம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்களும் கௌதம புத்தரைப் போலத்தான்.“நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? ” என்ற ஒரே கேள்வியை, கடந்த தேர்தலின் போது மக்களை பார்த்து அம்மா கேட்டார். இதை பார்த்து கொண்டு இருந்த தி.மு.கவின் அன்றைய செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கானமயிலாட கண்டு இருந்த வான்கோழி, தானும் அதுவாக பாவித்து தன் பொல்லாசிறகை விரித்து ஆடியதை போல மக்களை பார்த்து நீங்கள் செய்வீர்களாக என்று கிண்டல் செய்வது போல கேட்டார். அதற்கு “செய்ய மாட்டோம்” என்று பதில் அளித்து தோல்வி காணச் செய்தார்கள் மக்கள். அவரோடு சேர்ந்து கொண்டு ஏனைய எதிர்க்கட்சிகள் “நீங்கள் செய்வீர்களா?” என்று கேட்டபோது “முயற்சித்துப் பாருங்கள்” ஆனால் முடியாது என்று சொல்லி அவர்களைப் புறக்கணித்தார்கள். ஆனால், தமிழகமே எனது இல்லம் என்றும், தமிழக மக்களே என் பிள்ளைகள் என்றும் மக்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்கள் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்ற உறுதியுடன் மனம் நிறைந்த பாசத்துடன் “நீங்கள் செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?”என்று அம்மா கேட்டார். அதற்கு மக்கள் “நிச்சயம் செய்வோம், நிச்சயமாக செய்வோம்” என்று பதில் சொல்லி, செயலிலும் அதனைக் காட்டி அம்மாவுக்கு மகத்தான வெற்றியைப் பரிசாகத் தந்தார்கள்.அதே நம்பிக்கையை, அதே உறுதியை, அம்மாவின் நல்லாட்சியின் மீதும், அம்மாவின் விசுவாசத் தொண்டர்கள் மீதும் மக்கள்வைத் திருக்கிறார்கள். 2021-ல் எதிர்வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் அதற்கு முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலிலும் அதே வெற்றியை அம்மா அரசுக்கும், அம்மாவின் இயக்கத்திற்கும் மக்கள் தருவார்கள் தருவார்கள், இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.