முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க அரசாணை வெளியீடு

திங்கட்கிழமை, 10 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சத்துணவு மையங்களின் மூலம் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள 49 லட்சத்து 85 ஆயிரத்து 335 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.தக்காளி, லெமன், சாம்பார் சாதம் உள்ளிட்டவை மதிய நேரங்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில் அறிவித்தார். இதை தொடர்ந்து, காய்கறி தோட்டம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வந்தது.இந்தநிலையில், காய்கறி தோட்டம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், “தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் 10 ஆயிரத்து 24 சத்துணவு மையங்களில் காய்கறி தோட்டம் அமைப்பதற்கு ஒரு மையத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் 10 ஆயிரத்து 24 சத்துணவு மையங்களுக்கு ரூ.5 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகிறது. இதில், மத்திய அரசு ரூ.3 கோடியே 72 லட்சம், மாநில அரசு ரூ. 2 கோடியே 4 லட்சம் வழங்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து