எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான பிரதிநிதிகள் குழு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் அளித்தது. அந்த கடிதத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும், எந்த ஒரு திட்டத்தை அறிவிக்கும் முன் தமிழக அரசிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் முடிவை மத்திய அரசு முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதல்வரின் உத்தரவின் பேரில், என்னுடைய தலைமையில், ஏ. நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், ஏ.கே. செல்வராஜ், எஸ். முத்து கருப்பன், ஏ. விஜயகுமார், என். சந்திரசேகரன், அ. முகமது ஜான் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு வேளாண் துறை முதன்மை செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலர், புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு கடந்த 10.2.2020 அன்று டில்லியில், மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோரை சந்தித்து, முதல்வரின் கடிதத்தைக் கொடுத்தது. அந்த கடிதத்தில் உள்ள விவரங்கள் என்ன என்பது பற்றி சிலர் கேட்டிருக்கிறார்கள். அந்த கடிதத்தின் விவரத்தை மக்கள் தெரிந்து கொள்வது நல்லது எனக் கருதி அக்கடிதத்தை பத்திரிகைகளில் வெளியிடுகிறேன்.
மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், கடல் பகுதி மற்றும் நிலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான திட்டங்களை அமல்படுத்தும் சட்ட திருத்தம் தொடர்பான அறிவிக்கை குறித்தும், திட்டங்களை மக்கள் கருத்து கேட்காமல் நிறைவேற்றக் கூடாது எனவும் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அந்த அறிவிக்கையானது தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் வேளாண்மை மண்டலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் நிலை ஏற்படும் என்பதால் அதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. எனவே அந்த அறிவிக்கைக்கு எனது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். 2014-ம் ஆண்டு கால கட்டத்தில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி படுகை அடிப்படையிலான மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைத்தார் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அந்த குழுவானது பல்வேறு விஷயங்களுடன் குறிப்பிட்டுள்ள கருத்துக்களை குறிப்பிடுகிறேன். காவிரி டெல்டா பகுதியானது தமிழகத்தின் நெல் களஞ்சியம் ஆகும். இந்த பகுதி மக்கள் அடிப்படை வாழ்வாதாரமானது விவசாயத்தை சார்ந்தது. நிலக்கரி படுகை மீத்தேன் திட்டத்தின் காரணமாக வேளாண்மை செய்யப்படும் 4,266 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், தினசரி அடிப்படையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் கிலோ லிட்டர் தண்ணீரை 25 ஆண்டு காலம் உறிஞ்சி வெளியேற்றலாம் என்பதால் அந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும். தண்ணீரை நிலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. அதே போல் 667 சதுர கி.மீ. பரப்பளவில் குறுக்கும், நெடுக்குமாக அமைக்கப்படும் குழாய் பதிப்பு காரணமாகவும் கடும் சுற்றுச்சூழல் ஆபத்து உருவாகும். அதே போல் வாயுக்களை வெளியேற்றுவதன் காரணமாக காற்று மாசு ஏற்படும். தொழில்நுட்ப நிபுணர் குழுவானது வேளாண்மை மண்டலமாக உள்ள பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் பணப்பயன் கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்படும் காவிரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என 8.10.2015 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக மேலும் கூடுதலாக புள்ளி விவரங்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்கள், பட்டுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள டெல்டா பகுதி வட்டங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக உள்ளது. 28 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாநிலத்தின் 32 சதவீத உணவு தேவையை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. மேலும் காவிரி டெல்டா பகுதியில் மேற்கொள்ளப்படும் நிலக்கரி படுகை மீத்தேன் எடுக்கும் திட்டத்தால் கடல்நீர் நிலத்துக்குள் புகும் ஆபத்து உள்ளது என தொழில்நுட்ப நிபுணர் கமிட்டி ஏற்கனவே தெரிவித்திருக்கிறது. காவிரி டெல்டா பகுதியானது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக உள்ளது. 28 லட்சம் ஏக்கர் பகுதியில் 33.26 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்களை உற்பத்தி செய்து தருகிறது. அதேபோல் தென்னை, வாழை மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களை உற்பத்தி செய்யும் முக்கிய பகுதியாகவும் விளங்குகிறது. இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் புயல்கள், வெள்ளம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்படும் பகுதியாக இது விளங்குகிறது. 2018-ம் ஆண்டு உருவான கஜா புயல் காரணமாக 65 லட்சம் தென்னை மரங்களும், பல்லாயிரக்கணக்கான விவசாய பயிர்களும் பாதிக்கப்பட்டன. மேலும் வேளாண்மையை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு மாநிலத்தின் உணவு பாதுகாப்பிலும் தாக்கத்தை உருவாக்கும். காவிரி டெல்டா பகுதியானது ஆழ்குழாய் பாசனம் மூலமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதால் நிலத்தடி நீரில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு அங்கு போடப்பட்டிருக்கும் ஆழ்குழாய் கிணறுகளும் பாதிக்கப்படும். அதே போல் குறுக்கும் நெடுக்குமாக பதிக்கப்படும் எரிவாயு மற்றும் வீணாகும் நீரை கொண்டு செல்லும் குழாய்களால் மேற்பகுதியில் உள்ள இயற்கை வளமும், அதை சார்ந்த பகுதிகளும் பாதிக்கப்படும். 1985-ம் ஆண்டிலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே மேலும் இப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டத்தால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும். வேளாண் மண்டலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடல்நீர் உட்புகுதல் மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஆபத்து நிலவும் சூழ்நிலையில் இது பெரும் பாதிப்பை உருவாக்கும்.காவிரி டெல்டா பகுதிகளில் சதுப்பு நிலக்காடுகள் அமைந்துள்ள பகுதியாகும். இவையும் இத்திட்டத்தால் பாதிக்கப்படும். மேலும் காவிரி டெல்டா பகுதிகளானது தொல்லியல் மற்றும் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. இப்பகுதியில் புகழ் பெற்ற தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம், நவக்கிரக கோவில்கள், வேளாங்கண்ணி தேவாலயங்கள், நாகூர் தர்கா போன்றவை அமைந்துள்ளன. ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் இந்த கலாச்சார பாரம்பரிய சின்னங்கள் சேதமடையும் ஆபத்து உள்ளது. எனவே காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தும் திட்டம் இருந்தால் அதை மத்திய அரசு கைவிட வேண்டும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்த தமிழக அரசின் முடிவை மத்திய அரசு முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அது தங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்2 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2024.
22 Apr 2024 -
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்