முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து 5 மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நேற்று தேனி, கோவை மாநகர், கோவை புறநகர், அரியலூர், தருமபுரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்டமாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைப்புச் செயலாளர்கள் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., நத்தம் இரா. விசுவநாதன், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை தேனி, கோவை மாநகர், கோவை புறநகர், அரியலூர், தருமபுரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட அணிச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் முக்கிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து