எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து விளக்கம் அளிக்க முடியுமா என்று மத்திய அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கேள்வி எழுப்பினார். காற்று மாசைக் குறைக்கவும், அரசின் வாகனங்கள், பொதுப் பயன்பாடு வாகனங்கள் ஆகியவற்றை படிப்படியாக மின்னணு வாகனங்களாக, ஹைட்ரஜன் வாகனங்களாக இயக்கும் திட்டம் குறித்த வழக்கில் நீதிபதி பாப்டே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் காற்று மாசை குறைப்பதற்கு முதலில் மத்திய அரசின் வாகனங்கள் அனைத்தையும் மின்னணு வாகனங்களாகவும், ஹைட்ரஜன் வாயுவில் செயல்படும் வாகனங்களாகவும் மாற்ற உத்தரவிட வேண்டும். மின்னணு வாகனக் கொள்கையைச் செயல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி பொதுநல மனு சுப்ரீ்ம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் நட்கர்னி ஆஜரானார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி பாப்டே கூறுகையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நீதிமன்றத்துக்கு வந்து காற்று மாசைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், திட்டம், மின்னணு வாகனங்களை இயக்கும் திட்டம் ஆகியவை குறித்து விளக்கம் அளிக்கலாமே. இதைச் சம்மன், குற்றச்சாட்டு என எடுக்க வேண்டாம். டீசல், பெட்ரோல் வாகனங்களில் இருந்து முழுமையாக மின்னணு வாகனத்துக்கு மாறுவதற்கு என்ன விதமான செயல்திட்டம் இருக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள நீதிமன்றம் விரும்புகிறது. அதை அமைச்சர் தெரிவிப்பார் என விரும்புகிறோம். சி.என்.ஜி. வாயுவில் இயங்கும் வாகனங்கள், மின்னணு வாகனங்கள் குறித்து துறை அமைச்சர் அடிக்கடி விளக்கங்கள் அளிக்கிறார். அதனால் அவர் மூலம் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாமே எனத் தெரிவித்தார்.
அதற்குக் கூடுதல் சொலிசிட்டர் நட்கர்னி பதில் அளிக்கையில், நீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் வந்தால் அரசியல் பார்வையில் தவறான கண்ணோட்டமாகக் கருதப்படும் எனத் தெரிவித்தார். அப்போது தலைமை நீதிபதி பாப்டே பேசுகையில், அரசியல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என நீங்கள் கருதினால், மனுதாரரின் கோரிக்கைக்கு ஏற்ப எங்களால் பதில் அளிக்க முடியாது. அமைச்சருடன் மனுதாரர் வழக்கறிஞர் வாதிடப்போவதில்லை. நாங்கள் அமைச்சருக்கு சம்மன் அனுப்பவில்லை என்பதைத் தெளிவாகக் கூறுகிறோம் என்று தெரிவித்தார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் நட்கர்னி, சுத்தமான எரிபொருள் குறித்த முழுமையான அறிக்கையை அரசு முதலில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய விரும்புகிறது எனத் தெரிவித்தார். அதை தொடர்ந்து தலைமை நீதிபதி பாப்டே, சுற்றுச்சூழல் தொடர்பாக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது தொடர்பாகக் கூட வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், வாகனப் புகை மாசு நாள்தோறும் ஏற்படுகிறது. இதுகுறித்து யாரும் பேசுவதில்லை. வாகனப் புகை, மாசு குறைக்கப்பட்டால், காற்றில் கலக்கும் மற்ற நச்சுப்பொருட்கள் அளவு கணிசமாகக் குறைந்து விடும். இந்த காற்று மாசு பிரச்சினை டெல்லியில் மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து நகரங்களிலும் இருக்கிறது. மின்னணு வாகனங்களைப் புழக்கத்துக்குக் கொண்டு வரும் வழக்கு ஏராளமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதை நாங்கள் தீர்க்க வேண்டும். அதற்கு அமைச்சர் ஆக்கபூர்வமான முறையில் உதவ முடியாது என்று தெரிவித்தால், அதற்கு யார் பொறுப்பானவர்கள் என்பதை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் அடுத்த 4 வாரங்களில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.