முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி டெல்டா பகுதி சிறப்பு வேளாண் மண்டலம்: விவசாயிகளுக்கு நல்ல செய்தி விரைவில் வெளிவரும்- சட்டசபையில் முதல்வர் எடப்பாடி திட்டவட்டம்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு  தொடர்பாக நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம் வருமாறு:-

டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றி அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு வேளாண் பெருமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவர்களுடைய கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, அதை ஏற்று, அண்மையில் தலைவாசல் கூட்ரோடு  அருகில் புதிய கால்நடை பூங்கா துவக்க விழா நிகழ்ச்சியில், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டேன். இது சம்பந்தமாக, சட்ட நிபுணர்களுடன் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில், ஒரு நல்ல செய்தி விரைவில் வெளிவரும். 

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட உடனே, இதற்குண்டான பணிகள் எல்லாம் துவங்கப்பட்டு விட்டது. சரியான முறையிலே சட்ட வல்லுநர்களை கலந்து ஆலோசித்துத்தான் இதை கொண்டு வர முடியும். ஏன் என்றால் இதில் பல பிரச்சனைகள் இருக்கிறது. சட்டமன்றத்தின் மூலமாக இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து