முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் வரும் 24-ம் தேதி முதல் 28 வரை ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டங்கள் : சேலத்தில் முதல்வர் எடப்பாடி சிறப்புரையாற்றுகிறார்

புதன்கிழமை, 19 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டும், அரசின் நிதிநிலை அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை விளக்கியும் வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. இந்த கூட்டங்கள் தமிழகம் மட்டுமல்லாது, புதுவை, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, புது டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. 

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அம்மாவின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டும், அம்மாவின் அரசு தமிழக மக்களின் வளர்ச்சிக்காக சட்டசபையில் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களை விளக்கியும் வரும் 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிரணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு, விவசாய பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுனரணி, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலை பிரிவு உட்பட அ.தி.மு.க. பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பு பேச்சாளர்கள் மற்றும் கலைக்குழுவினருடன் தொடர்பு கொண்டு அம்மாவின் 72-வது பிறந்த நாள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிவிப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அதன்படி 24-ம் தேதி திங்கட்கிழமை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் ஆர்.கே. நகர் பகுதியிலும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாநகராட்சியிலும் சிறப்புரையாற்றுகின்றனர். துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி வேலூர் கிழக்கு பகுதியிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் தாம்பரம் நகரத்திலும், அமைப்பு செயலாளர் பொன்னையன் கொளத்தூர் பகுதியிலும், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை அம்பத்தூர் பகுதியிலும் சிறப்புரையாற்றுகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து