எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 399 கோடியே 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4,748 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டும், மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், குறிப்பாக, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நோக்கிலும், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்திடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் பல்வேறு குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை அம்மா வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், சென்னை, திருவொற்றியூர், நல்ல தண்ணீர் ஓடை குப்பம் திட்டப் பகுதியில் 58 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சேலம், கோட்ட கவுண்டம்பட்டி திட்டப் பகுதியில் 18 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், ஆலம்பாளையம் - சத்யா நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நில வங்கி திட்டம் பகுதி-III திட்டப் பகுதியில் 76 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 960 அடுக்குமாடி குடியிருப்புகள்; கரூர் மாவட்டம், கரூர், சணப்பிரட்டி திட்டப் பகுதியில் 16 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகள், கோயம்புத்துhர் மாவட்டம், கோயம்புத்தூர், கோவை புதூர் திட்டப் பகுதியில் 56 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 672 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் - அளுக்குளி திட்டப் பகுதியில் 24 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம், திருப்பூர், பாரதி நகர் திட்டப் பகுதியில் 22 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர், ஜெயா நகர் திட்டப் பகுதியில் 20 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 256 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, புரசைவாக்கம், கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-I திட்டப் பகுதியில் 71 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 864 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, எர்ணாவூர், இந்திரா காந்தி குப்பம் திட்டப் பகுதியில் 10 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, காலடிப்பேட்டை, டோபிகானா பகுதி-I திட்டப் பகுதியில் 10 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, மணலி புதுநகர் பகுதி-I திட்டப் பகுதியில் 31 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நில வங்கி திட்டம் பகுதி-I திட்டப் பகுதியில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 அடுக்குமாடி குடியிருப்புகள், கோவில்பட்டி நில வங்கி திட்டம் பகுதி-II திட்டப் பகுதியில் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள், சென்னை, கோயம்பேட்டில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலப்பரப்பில், 3 அடித்தளங்கள், தூண் தளம் மற்றும் 9 மேல் தளங்களுடன் 1,88,237 சதுர அடி கட்டிட பரப்பளவில், குளிர்சாதன வசதி, தீயணைப்புக் கருவிகள், குடிநீர் சுத்திகரிப்பு வசதி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், சூரிய மின்சக்தி வசதியுடன் கூடிய மின்விளக்குகள், வாகனங்கள் நிறுத்துமிடம், 1500 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் உள்ளிட்ட வசதிகளுடன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் ஆகிய துறைகளின் பயன்பாட்டிற்காக 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டம், பருத்திப்பட்டு கிராமத்தில் 10 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா திருமண மண்டபம் என மொத்தம் 573 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னடுக்கு அலுவலகக் கட்டிடம், அம்மா திருமண மண்டபம், ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பி.கே. வைரமுத்து, தலைமைச் செயலாளர் சண்முகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் மற்றும் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) முனைவர் கார்த்திகேயன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் முருகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தமிழகத்தில் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்க பள்ளிக்கல்வி துறை திட்டம்
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலியாக, தமிழகத்தில் ஏப்ரல், 13க்குள் அனைத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.