முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துருக்கி ராணுவம் தாக்குதல்: 50 சிரியா வீரர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 21 பெப்ரவரி 2020      உலகம்
Image Unavailable

அங்காரா : துருக்கி ராணுவ வீரர்கள் மீது சிரியா தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதலில் சிரியா ராணுவ வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து துருக்கி ராணுவம் தரப்பில், “இட்லிப்பின் வடமேற்குப் பகுதியில் சிரியா நடத்திய தாக்குதலில் இரு துருக்கிராணுவ வீரர்கள் பலியாயினர். 5 பேர் காயமடைந்தனர். சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கிதரப்பில் பதிலடி தரப்பட்டது. இதில் சிரியா வீரர்கள் 50 பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கி அதிபர் எர்டோகனின் தாக்குதலுக்குப் பிறகு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப்பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரியா படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. ஆனால், அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் சிரியா - துருக்கி இடையே மோதல் வலுத்துள்ளது.சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், துருக்கி ராணுவம் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவலாம் என்று ஏர்டோகன் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து