முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் சோனியாவுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார். 

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க., சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்ததால் கூட்டணி முறிந்தது. 

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்த சிவசேனா புதிய கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். 

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே முதல் முறையாக நேற்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவும் உடனிருந்தார். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் நேற்று இரவு சந்தித்தனர். பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியையும் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே ஆகியோ சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்தும் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து