முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ரவி தாஹியா தங்கம் வென்றார்

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி:  டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா 10 - 0 என்ற கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ரவி தாஹியா மற்றும் தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோ மோதினர். இதில் ரவி தாஹியா 10-0 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் தாஹியா தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல், இன்று நடந்த ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா மற்றும் ஜப்பானின் டகுடோ ஒட்டாகுரோ விளையாடினர். இந்த போட்டியில் கடுமையாக போராடிய பூனியா, ஒட்டாகுரோவிடம் தோற்றுப் போனார். இதனால் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.  பெண்கள் பந்தயத்தில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து