முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணி வரை நீடிப்பு: மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சுய ஊரடங்கு உத்தரவு இன்று காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாகவும், அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் நாடு முழுவதும் 341-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானவர்களுக்கு சந்தேகத்தின்பேரில் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 64 பேருக்கு இந்த தொற்று உள்ளது.

இந்த நிலையில், பிரதமர்  மோடி, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுய ஊரடங்கை நேற்று காலை 7 மணி முதல் இரவு 9  மணி வரை கடைபிடிக்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியில் வரவேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் நேற்று  சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு நிகழ்வு இன்று காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நோய் பரவுவதை தடுக்க நேற்று காலை 7 மணிமுதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன் வந்து மேற்கொண்ட ஊரடங்கு நிகழ்வு பல்வேறு தரப்பு மக்கள் மற்றும்  தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இரவு 9 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த ஊரடங்கு நிகழ்வு மக்களின் நலன் கருதி நாளை (இன்று) (23.03.2020) காலை 5 மணிவரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது.  எனினும் அத்தியாவசியப்பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தப்படுகிறது.  இத்தொடர் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு நல்க பொதுமக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,025 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கொரோனவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,06,892 ஆக  உயர்ந்துள்ளது. இந்தியாவில் 341 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவது தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து