முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால் தாராளமாக கிடைக்கும்: தட்டுப்பாடுக்கு வாய்ப்பு இல்லை: முகவர்கள் சங்கம் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2020      தமிழகம்
Image Unavailable

தினசரி அதிகாலை 3.30மணியில் இருந்து காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் பால் தாரளமாக, தங்குதடையின்றி கிடைக்கும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தினசரி அதிகாலை 3.30மணியில் இருந்து காலை 9 மணி வரை பால் முகவர்களின் கடைகளில் பால் தாரளமாக, தங்குதடையின்றி கிடைக்கும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. எனவே பால் கிடைக்காது என பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை கொரோனா வைரஸ் நோய் தொற்றானது வெப்பநிலையை விட குளிர் நிலையில் நின்று பரவும் வல்லமை கொண்டது என்பதால் ஆவின் மற்றும் தனியார் பால் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை ஏற்றி வரும் வாகனங்களை தமிழக அரசு கண்டிப்பாக சோதனைக்குட்படுத்த வேண்டும். குறிப்பாக ஆவின் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை பால் பண்ணைகளுக்கு வெளியிலேயும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு பால் கொண்டு வரும் தனியார் பால் நிறுவனங்களின் வாகனங்களை அம்மாநில எல்லைகளிலேயும் நிறுத்தி, அந்தந்த வாகனங்களில் கொரானா தொற்று இருக்கிறதா...? என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே பால் முகவர்களுக்கு பால் விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து