எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்குங்கள் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பாராட்டியுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த 22-ம் தேதி மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த 24-ம் தேதி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அன்று இரவு நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய பிரதமர் மோடி இந்த ஊரடங்கு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்று அதிரடியாக அறிவித்தார். அதன் படி தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு என்ற வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
கோவிட் 19 எனப்படும் கொரோனாவை ஒழித்துக்கட்டுவதற்காக தாங்கள் எடுத்து வரும் தீர்க்கமான துணிச்சலான நடவடிக்கைகளுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொடிய வைரசில் இருந்து இந்தியாவையும், இந்திய மக்களையும் காக்க தாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள். தமிழகமும் 24-ம் தேதி மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதை திறம்பட செயல்படுத்தவும் அரசு இயந்திரங்களை முடுக்கி விட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதே நேரம் அத்தியாவசிய சேவைகள் தொடரவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவை ஒழித்துக்கட்ட , தனிமைப்படுத்தும் வசதிகள், வெண்டிலேட்டர் உள்ளிட்ட தடுப்பு சாதனங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்புக்காக நீங்கள் ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நாட்டுக்கு ஒதுக்கி இருக்கிறீர்கள். அதற்காக எனது நன்றி. தமிழகத்திலும் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியமாகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளுக்காக தமிழக அரசு 10 ஆயிரம் படுக்கைகளை ஒதுக்கி உள்ளது. இது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அதை மேம்படுத்தவும் ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அப்போதுதான் அத்தியாவசிய சாதனங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
21 நாட்கள் ஊரடங்கு என்பது பொதுமக்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மாநிலத்தின் பொருளாதாரமும் பாதிக்கப்படும். இதனை உணர்ந்து சமீபத்தில் சில நிவாரண உதவிகளை நான் அறிவித்தேன். 144 தடை அமலில் இருப்பதால் ரூ. 3,280 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை நான் அறிவித்துள்ளேன். குறிப்பாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. ஆயிரம் வழங்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை ரேசனில் இலவசமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கு மேலும் 2 வாரம் நீடிக்கும் என்று தங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏழை மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை பாதிக்கும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். அவர்களிடம் சேமிப்பும் குறைவாக இருக்கும். எனவே அவர்களுக்கு உதவ வேண்டியது அவசியம். குறிப்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் துயரங்களை சந்திக்க நேரிடும். அவர்களுக்காக தமிழகம் மாதம் ஒன்றுக்கு ரூ. 400 கோடி சம்பளம் ஒதுக்குகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இன்னல் கருதி இந்த ஊழியர்களுக்கு சிறப்பு நிதியாக குறைந்தபட்சம் ரூ. 500 கோடி ஒதுக்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் இதர அமைப்புசாரா துறையில் 15 லட்சம் ஊழியர்கள் இங்கு உள்ளனர். இவர்கள் இந்த முழு அடைப்பால் இன்னலுக்கு ஆளாக நேரிடும். அதை கருதி அவர்களுக்கு சிறப்பு நிதியாக ரூ. ஆயிரமும், 15 கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவர்களுக்கு ஏற்படும் சம்பள இழப்பை கருத்தில் கொண்டு ரூ. 500 கோடி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே இந்திய உணவு கழகத்தில் உணவு தானியங்களை தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டும். இந்த ஊரடங்கால் பல தொழிற்சாலைகள், வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வங்கி கடனை திருப்பி செலுத்துவதை குறைந்தபட்சம் 2 காலாண்டுக்கு மாற்றி அமைக்க வேண்டும். இந்த சிறு, குறு வியாபாரிகளுக்கான வட்டி மற்றும் அபராதத்தை 2 காலாண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். கொரோனாவை தடுக்கும் பொருட்டு தமிழகத்திற்கு அவசர நிதி தேவைப்படுகிறது. ஏழை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த துயரத்தை தீர்க்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகவும் சிறப்பு நிதியாக தமிழகத்திற்கு ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.