எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனாவை தடுக்க ஒரே வழி தனிமைப்படுத்தி கொள்வதுதான் என்றும் இந்த விஷயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவையில்லை என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 11 குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கொரோனா தொற்று நோய் உலக அளவில் 199 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய்க்கு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பேர் பலியாகி இருக்கிறார்கள்.இந்தியாவை பொறுத்தவரை கொரோனா நோய்க்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருவர் பலியாகி இருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 50 பேர் கொரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது மேலும் 17 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் என 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 67 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. அவர்கள் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
17,869 படுக்கைகள்
தமிழகத்தில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்க 17 ஆயிரத்து 869 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 1989 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 420 பேருக்கு 25 நாள் கண்காணிப்பு முடிந்துள்ளது. கொரோனா நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை என்னுடைய தலைமையில் 8 முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு முறையும் தலைமைச் செயலாளர், துறை அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி. உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் போர்ஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் தலைமைச் செயலாளர் தலைமையில் 4 முறை நடைபெற்றிருக்கிறது. நானும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆய்வு நடத்தினேன். ஒன்றரை கோடி முக கவசங்கள் வாங்க அரசு ஆர்டர் செய்துள்ளது. அதேபோன்று என்95 என்னும் முகக் கவசங்கள் 25 லட்சம் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வரவேண்டி உள்ளது. நோய் தடுப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
வெளியூர் செல்ல யாருக்கு அனுமதி?
ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசரமாக சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல விரும்புகிறார்கள். எனவே திருமண நிகழ்ச்சி மற்றும் சிறப்பு நிகழ்ச்சிக்கு மட்டும் வெளியூர் செல்ல அனுமதி அளிக்கப்படும். இந்த அனுமதியை எப்படி வழங்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்தந்த வட்டாட்சியர்களே அனுமதி வழங்கலாம் என்று தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய் எப்படி வருகிறது? எப்படி பரவுகிறது. அதன் ஆபத்து என்ன என்பது பற்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்து கூறி வருகிறோம். துண்டு பிரசுரங்கள் அச்சடித்தும் தருகிறோம். ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலமும் எடுத்து சொல்லி வருகிறோம். பத்திரிகையாளர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கொரோனா நோய் தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்வது தான். கொரோனா பரவலில் தமிழகம் 2-வது கட்டத்தில் இருந்து 3-வது கட்டத்திற்கு செல்லாமல் தடுப்பதில் தீவிரம் காட்டப்பட்டுள்ளது. பாமர மக்களுக்கு இந்த நோயின் ஆபத்து குறித்து மேலும் தெரியப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
எத்தனை சட்டம் போட்டாலும் மக்களின் ஒத்துழைப்பு என்பது தான் முக்கியம். மக்களை தண்டிப்பதற்காக சட்டம் அல்ல. ஆனால் அந்த சட்டத்தை மக்கள் மதித்து நடக்க வேண்டும். இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. வரலாற்றில் இதுபோன்று நாம் சந்திக்கவே இல்லை. இது ஒரு சவாலான நேரம். படிப்படியாக கொரோனா பாதிப்பை தடுக்க வேண்டும். மற்ற மாநிலங்களை விட தமிழக மக்கள் ஒத்துழைப்பு மிக நன்றாக உள்ளது.
ரூ.1000 எப்போது?
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். பொது வினியோக திட்டத்தின் கீழ் எப்படி பொருட்களை விநியோகிப்பது? ரூ.1000 எப்படி வழங்குவது என்று ஆலோசனை நடத்துகிறார்கள். எனவே இதில் தெளிவான முடிவு எடுத்து அறிவிக்கப்படும். நகரம் முதல் கிராம் வரை கொரோனா தொற்று நோய் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகிறது. கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி, பழங்கள் ஏற்றி வரும் வாகனங்களில் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. டிரைவர்களுக்கும் சானிடைசர் கொடுக்கப்பட்டு பரிசோதனையும் செய்யப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லை
கொரோனா தொற்று நோயை தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது மருத்துவ துறை சம்பந்தப்பட்டது. அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தேவை இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து இங்கு பணிபுரிய வந்த தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிடம், உணவு அனைத்தும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் தொழிலாளிகளாக பணி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் தங்க இருப்பிடம், உணவு அனைத்தும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். எதற்கு எவ்வளவு பணம் செலவு செய்யப்படுகிறதோ அதனை அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காதால், கொரோனாவுக்கு தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது தான். வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மாஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் ரஷ்ய உளவுத்துறை தலைவர் குற்றச்சாட்டு
27 Mar 2024மாஸ்கோ, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷ்யாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார்
-
சக்தியின் வடிவம்: மே.வங்க பா.ஜ.க. வேட்பாளரை பாராட்டிய பிரதமர் மோடி
27 Mar 2024புது டெல்லி, மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பா.ஜ.க.வேட்பாளர் ரேகா பத்ராவை சக்தியின் வடிவம் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் : சென்னை வானிலை மையம் தகவல்
27 Mar 2024சென்னை : தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 31-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பிரபஞ்ச அழகி போட்டியில் முதல் முறையாக சவுதி பங்கேற்பு
27 Mar 2024ரியாத், சவுதி அரேபியா முதல் முறையாக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்க உள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம்? மத்திய உளவுத்துறை எச்சரிக்கை கடிதம்
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டில் நாச வேலைக்கு பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம்
-
தேர்தல் ஆணைய கருத்தை ஏற்கிறோம்: ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிட முடியாது : வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவு
27 Mar 2024சென்னை, ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது; 900-க்கும் அதிகமான வேட்பாள்கள் மனுத்தாக்கல் வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை
27 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது.
-
சிதம்பரம் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் வேட்புமனு தாக்கல் : தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை என பேட்டி
27 Mar 2024அரியலூர் : சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட கலெக்டருமான ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று தன
-
பாராளுமன்ற தேர்தல்: எடப்பாடி பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம்
27 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
பாராளுமன்ற தேர்தல்: சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா உத்தவ் தாக்கரே அணி வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மேலும் 2 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கட்டணம் உயர்வு
27 Mar 2024சென்னை, சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
-
சத்தீஷ்கரில் படையினருடன் மோதல்: நக்சலைட்டுகள் 6 பேர் சுட்டு கொலை
27 Mar 2024பிஜாப்பூர், சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் இரண்டு பெண்கள் உட்பட 6 நக்சல்கள் உயிழந்தனர். பலர் காயமடைந்திருக்கலா
-
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: இன்று எனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார்: கெஜ்ரிவால் மனைவி பேட்டி
27 Mar 2024புது டெல்லி, டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கில் இன்று (வியாழக்கிழமை) தனது கணவர் நீதிமன்றத்தில் உண்மைகளை வெளியிடுவார் என்று அரவிந்த் கெஜ்ரி
-
பார்லி. தேர்தல்: கோவையில் அண்ணாமலை மனுத்தாக்கல்
27 Mar 2024கோவை : பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க.
-
ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் பெயரில் மேலும் ஒருவர் போட்டி
27 Mar 2024ராமநாதபுரம், ராமநாதபுரத்தில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
-
கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவாலின் மனு மீது பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
27 Mar 2024புதுடெல்லி : கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட 2 கேரள இளைஞர்கள் நாடு திரும்ப ஏற்பாடு: மத்திய அரசு
27 Mar 2024திருவனந்தபுரம், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களில் 2 பேர் நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.
-
நீலகிரி தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வேட்புமனு தாக்கல்
27 Mar 2024நீலகிரி, நீலகிரி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
சிவசேனா உத்தவ் தாக்கரே அணியின் 16 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
27 Mar 2024மும்பை, மராட்டியத்தில் சிவசேனா உத்தவ் தாக்கரே அணி சார்பில் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மைக்ரோசாப்ட் விண்டோஸ் தலைவரான சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்
27 Mar 2024நியூயார்க் : மைக்ரோசாப்ட் விண்டோஸ் மற்றும் சர்போஸின் புதிய தலைவராக சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவரான பவன் டவுலூரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி: சிரியாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா திட்டவட்ட மறுப்பு
27 Mar 2024டமாஸ்கஸ், சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது.
-
சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது: துணை நிலை கவர்னர்
27 Mar 2024புது டெல்லி, சிறையிலிருந்து டெல்லி அரசு இயங்காது என்பதை டெல்லி மக்களிடம் உறுதியாக என்னால் கூற முடியும் என்று டெல்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார்.
-
சிவகாசியில் விஜயகாந்த் மகனை ஆதரித்து எடப்பாடி இன்று பிரச்சாரம்
27 Mar 2024சிவகாசி : பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.