முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செல்போன் அழைப்பு மூலம் முதல்வர் எடப்பாடி கொரோனா விழிப்புணர்வு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

செல்போன் அழைப்பு மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சிலருக்கு நேற்று முன்தினம் ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பை எடுத்த உடனேயே, நான் உங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன் என்று கூறியதும் சிலருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. அந்த அழைப்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆடியோ வடிவில் பதிவு செய்யப்பட்ட  முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உரை 28 வினாடிகள் நீடித்தது. அதில் வேண்டுகோள் விடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் எங்களுக்கு முக்கியம். உங்கள் நலனை கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனவே இந்த நோயை கட்டுப்படுத்த விழித்திருங்கள். விலகி இருங்கள். வீட்டிலேயே இருங்கள். நன்றி. இவ்வாறு அவர் அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து