முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளோர் உயிரிழந்தால் ரூ. ஒரு கோடி இழப்பீடு: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

புதன்கிழமை, 1 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதைத் தடுக்கும் முயற்சியில் மக்களை வீடுகளில் தனிமைப்படுத்தவும், சமூக இடைவெளியை உருவாக்கவும் 21 நாட்கள் ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் மக்கள் கொரோனாவால் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோர், அறிகுறிகளுடன் கண்காணிப்பில் இருப்போர் அதிகரித்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் நடவடிக்கையில் ஏராளமான மருத்துவர்கள், செவலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அது போலவே சுகாதார பணிகளில் ஏராளமானதுப்புரவு தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளின் போது அவர்களுக்கு மரணம் ஏற்பட்டால் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். அரசு மட்டுமின்றி தனியார் துறை ஊழியர்களும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து