எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அம்மா உணவகத்தில் உள்ள உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தை, சுகாதாரத்தை பரிசோதித்தார். அங்குள்ள சமையல் அறைக்கு சென்று அங்குள்ள உணவு பொருட்களை எல்லாம் பார்வையிட்டு தரத்தை பரிசோதித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் அவர் கூறியதாவது:-
அம்மா, ஏழை, எளிய மக்களுக்காக மலிவு விலையில் உணவு கொடுப்பதற்காக அம்மா உணவகத்தைத் திறந்து வெகு சிறப்பாக இன்றைக்கு தமிழகம் முழுவதும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், அம்மா உணவகத் திட்டம் சிறப்பான திட்டம் என்று அமல்படுத்தியிருக்கிறார்கள். உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயால் சுமார் 199 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது என பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பல்வேறு மாநிலங்களில் பரவியிருக்கிறது, தமிழகத்திலும் பரவியிருக்கிறது என்று தெரிவித்தார்.
அதை தொடர்ந்து நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவை வருமாறு:-
கேள்வி:- அம்மா உணவகத்தில் வழங்குகின்ற உணவுகளை இலவசமாக கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை இருக்கிறதே?
பதில்:- மலிவு விலையில் தானே உணவு இருக்கிறது. இப்பொழுது ஒரு ரூபாய்க்கு இட்லி தருகிறோம். இந்தியாவிலேயே ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்து தமிழ்நாடு, அதற்கு முன்னுதாரணமாக விளங்கிக் கொண்டு இருக்கிறது.
கேள்வி:- இப்போதைய சூழ்நிலையில் அம்மா உணவகத்தைத் தான் எல்லோரும் நம்பியிருக்கிறார்கள். இப்பொழுது திறந்திருக்கும் ஓட்டல்களில் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே?
பதில்:- எவ்வளவு உணவு வேண்டுமென்றாலும் அம்மா உணவகத்தில் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம். அதாவது ஒரு நாளைக்கு நான்கரை லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்கள். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் உணவு தயாரிப்பதற்கு அரசால் உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் அம்மா உணவகத்தின் மூலமாக மக்களுக்கு எளிதாக மலிவான விலையில் உணவு கிடைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற உணவகங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அதிக விலைக்கு உணவுகளை எப்படி விற்க முடியும்? பார்சல் பெறுவோர்கள் பெற்றுக் கொள்ளலாம். உணவகம் எங்கும் திறக்கவில்லை, அப்படி இருந்தால் சொல்லுங்கள், தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- இ.எம்.ஐ. வசூல் செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டும், வங்கிகளிலிருந்து இ.எம்.ஐ. கட்ட மெசேஜ் வருகிறதே?
பதில்:- நிதித்துறை செயலாளரும், வங்கி உயர் அதிகாரிகளும் பேட்டியே கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தான் வசூல் செய்கிறார்கள், அவர்களே பேட்டியும் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, இது மத்திய அரசு சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருப்பதனால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்திற்கு இதை கொண்டு போகிறோம். ஏற்கனவே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்கிறது, மத்திய அரசும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இருந்தாலும், நீங்கள் சொல்வதை கவனத்தில் எடுத்துக் கொண்டு மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்தப்படும்.
கேள்வி:- டெல்லியில் ஜமாத் கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1500 பேர் பங்கு பெற்றார்கள். அதில் கிட்டத்தட்ட 500 பேரை கண்டுபிடித்து விட்டார்கள், மற்றவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
பதில்:- தமிழக சுகாதாரத் துறை செயலாளர் தனது பேட்டியில் இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கிறார். சுமார் 1500 பேர் அந்த மாநாட்டி-ல் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1331 பேர் என்று கருதுகிறேன், அவர்கள் கலந்து கொண்டு திரும்பி வந்திருக்கிறார்கள். மீதம் உள்ளவர்கள் டெல்லியிலேயே இருக்கிறார்கள். கலந்து கொண்டவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 515 நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த சோதனைகளில், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட 45 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் முடிவு வந்திருக்கிறது. அதனால் ஏனைய நபர்கள் தானாக முன்வந்து அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறோம். ஏனென்றால், அவர்களுடைய விலாசம் முழுமையாக கிடைக்கவில்லை. சுகாதாரத் துறை செயலாளர் இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்களது குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டிலுள்ள பலர் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். இந்த நோயினுடைய தாக்கத்தை அறிந்து, தாங்களாக முன்வந்து அரசிற்கு தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்படும். பலர் குணமாகி கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் குணமாகும் சூழ்நிலை இருக்கிறது. அதைத்தான் நமது சுகாதாரத் துறை செயலாளர் ஊடகம் மற்றும் பத்திரிகையின் வாயிலாக வேண்டுகோளாக வைத்திருக்கிறார்.
கேள்வி:- டெல்லியில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு பாதிப்பு இருப்பது போலவே 21–ம் தேதி ஈஷாவில் கூட கூட்டம் நடந்திருக்கிறது, பலபேர் வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கிறார்கள். ஈஷா கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை ஆய்விற்கு உட்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- அறிகுறி இருந்தால் வாய்ப்பு இருக்கிறது. அறிகுறி இருக்கின்ற காரணத்தால் இவர்களுக்கு சோதனை நடத்துகிறார்கள், அறிகுறி இல்லாமல் எதையும் சொல்ல முடியாது. கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு மேல் தகவலின் அடிப்படையில் வீடு வீடாக சென்று ஒரு லட்சம் வீடுகளுக்கு மேலாக நம்முடைய அதிகாரிகள் சென்று சோதனை செய்திருக்கின்றார்கள். இதுபோல், இருமல், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை செய்கிறோம். அந்த பரிசோதனையில் பாசிடிவ் ஆக வந்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். இது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இதனடிப்படையில் திருக்கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் என அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசாலும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த இடங்களெல்லாம் அதிகமான கூட்டம் கூடுகின்ற இடங்களாகும். அதனால் பலருக்கு இந்த தொற்று வந்துவிடும் என்ற காரணத்தினால் தான் அனைத்து மதம் சார்ந்த கோவில்களும் மூடப்பட வேண்டுமென்று அரசால் உத்தரவிட்டு மூடப்பட்டிருக்கின்றது. நீங்கள் தகவல் சொன்னால் அவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அதுமட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பட்டியலையும் எடுத்திருக்கிறோம். அவர்கள் வெளிநாட்டவர்களானாலும் சரி, அல்லது தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்களானாலும் சரி, அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
கேள்வி:- மருத்துவமனைகள் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் உட்பட தனியார்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தை கொடுக்கிறார்கள், அலுவலகத்தை கொடுக்கிறார்கள், அதை பயன்படுத்த அரசு முன்வருமா?
பதில்:- அந்த அளவிற்கு இன்னும் தேவைப்படவில்லை. நாம் 17,000 படுக்கை வசதிகள் செய்து கொடுத்திருக்கின்றோம். 17,000 பேர் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யக் கூடிய அளவிற்கு மருத்துவமனைகள் இருக்கின்றன. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுகின்ற போது அதையும் நாங்கள் பயன்படுத்தி கொள்வோம்.
கேள்வி:- ஏப்ரல் 14–ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு தொடருமா?
பதில்:- மத்திய அரசு 14–ம் தேதி வரை அறிவித்திருக்கிறது. அதற்குப் பிறகு மத்திய அரசு தான் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது பற்றி முடிவு செய்யும்.
கேள்வி:- 144 தடை உத்தரவு முதல் மூன்று நாட்கள் மக்கள் நல்ல முறையில் கடைப்பிடித்தார்கள். தற்போது அந்த கட்டுப்பாடுகள் குறைந்துள்ளதா?
பதில்:- ஊடகமும், பத்திரிக்கையும் தான் சொல்கிறீர்கள். அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றும், மருத்துவமனைகளுக்கு போக முடியவில்லை என்றும் சொல்கிறீர்கள். இப்படி நீங்களே தான் கேள்வியும் கேட்கிறீர்கள், நீங்களே தான் பதிலும் சொல்கிறீர்கள். நாங்கள் என்ன செய்ய முடியும். பொதுமக்களுடைய நலன் கருதி அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கையோடு பொதுமக்கள் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, 144 தடை உத்தரவை பிறப்பித்தோம். ஒவ்வொருவடைய உயிரும் மிக முக்கியம். எல்லாருமே இதில் பங்கு கொள்ள வேண்டும். இது தனிப்பட்ட ஒருவருடைய விஷயம் அல்ல. ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், நான் உட்பட, அமைச்சர் ஜெயக்குமார் உட்பட, அனைத்து அதிகாரிகள் உட்பட, பணி செய்கின்ற பணியாளர்கள் உட்பட, ஒட்டுமொத்த மக்களும் இதில் ஒன்று கூடினால் தான் இந்த கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும், பரவுவதை தடுக்க முடியும். தனி ஒருவரால் அல்ல. அரசாங்கம் சட்டம் போடலாம். அந்த சட்டத்தை மதித்து மக்கள் நடக்க வேண்டும். நோய் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த சட்டத்தையே போட்டு இருக்கிறோம். இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த நோயின் தாக்கத்தை பற்றி தெரியாமலேயே மக்கள் பரவலாக வெளியே சென்று கொண்டு இருக்கிறார்கள். நோய்வாய்பட்டவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பது பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றாக தெரியும்.
வெளிநாட்டில் இருக்கின்ற பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையிலே துடிதுடிக்கின்ற காட்சியை எல்லாம் பார்க்கின்றோம். சுமார் 42 ஆயிரம் பேர் இறந்து விட்டதாக ஊடக செய்தியில் பார்த்தோம். இப்படி நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்ற இந்த சூழ்நிலையிலே, அரசுக்கு ஒவ்வொரு உயிரும் மிக முக்கியம். அதன் அடிப்படையில் தான் 144 தடை உத்தரவை போட்டு இருக்கின்றோம். பிரதமர் மோடியும், இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களில் இருக்கின்ற பொதுமக்களும் இதை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றார். தமிழ்நாடு அரசும், மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், அதேபோல, மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய வேண்டுகோள்.
பாதிப்பு எண்ணிக்கை உயருகிறதே?
கேள்வி:- பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக ஒரே நாளில் அதிகரித்து இருக்கிறது. ஏப்ரல் 14–ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பதற்கான சூழல் இருக்கிறதா?
பதில் :- முதலிலே இதற்கான பதிலை சொல்லிவிட்டேன். மத்திய அரசு தான் முடிவு செய்யும்.
கேள்வி:- சிறு குறு விவசாயிகள் தங்களுடைய விளைச்சலை விற்பனை செய்ய முடியவில்லை, நிறைய வீணாகிறது என்று கூறுகிறார்களே?
பதில்:- விவசாயிகளுக்கு எந்தவித தடையும் இல்லை என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு விட்டது. அறுவடை செய்யவோ, வேளாண் பணியை மேற்கொள்ளவோ, எவ்வித சிரமமும் இல்லாமல் பணி மேற்கொள்ளலாம் என்று அரசு தெளிவுப்படுத்தி விட்டது. அதேபோல, விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதற்கும் எந்த தடையும் கிடையாது. அதற்கு அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் பாதிப்பு. இந்தியா மட்டுமல்ல, உலகமே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. நம் இந்தியா மட்டுமல்ல, தமிழ்நாடு மட்டுமல்ல, உலகையே இந்த நோய் அச்சுறுத்தி கொண்டு இருக்கிறது. இந்த நோயினுடைய தன்மையை கருதி, அந்தந்த நாட்டிற்கு தக்கவாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரைக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை துரிதமாக எடுக்கப்பட்டு வருகிறது. ஒருவர் கூட இதனால் பாதிக்கப்படக் கூடாது என்பது தான் அரசினுடைய நோக்கம். அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு ப்ரை2 days 12 hours ago |
ஆப்பிள் பான் கேக்4 days 13 hours ago |
சிக்கன் மிளகு வறுவல்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 18-03-2024.
18 Mar 2024 -
பிரதமர் நரேந்தி மோடி இன்று சேலம் வருகை : பிரம்மாண்ட பிரச்சார கூட்டத்தில் பேசுகிறார்
18 Mar 2024சேலம் : இன்று சேலம் நகருக்கு வருகை தரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.
-
தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
18 Mar 2024புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என்.
-
பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு: கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அவசர வழக்காக விசாரிக்க தமிழக அரசு மனு தாக்கல்
18 Mar 2024புதுடெல்லி, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
கோவை பார்லி. தொகுதியில் பா.ஜ.க.தான் போட்டியிடும் : அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டம்
18 Mar 2024கோவை : கோவை பா.ஜ.க. கோட்டையாக உள்ளது. இத்தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவது உறுதி என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் வெற்றி : மே மாதம் பதவியேற்பு விழா நடக்கிறது
18 Mar 2024மாஸ்கோ : ரஷ்ய அதிபர் தேர்தலில் 87.29 சதவீத வாக்குகள் பெற்று புடின் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
-
போதை பொருள் புழக்கம் அதிகரிப்பு: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
18 Mar 2024சென்னை : தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்புக்கு காரணமான தமிழக அரசுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் போட்டியிட அனுமதிக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். மனு
18 Mar 2024சென்னை, அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங். போட்டியிடும் 9 தொகுதிகள் : ம.தி.மு.க.வுக்கு திருச்சி ஒதுக்கீடு
18 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க.
-
தி.மு.க.வின் பார்லி. தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை 20-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனய
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக், சென்னை அழைத்து வரப்பட்டார்
18 Mar 2024சென்னை : போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது: எந்தெந்த தொகுதிகளில் போட்டி - முழுவிவரம் வெளியீடு
18 Mar 2024சென்னை, தமிழ்நாட்டில் தி.மு.க.
-
கவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம் : தமிழகத்தில் போட்டியிட போவதாக அறிவிப்பு
18 Mar 2024சென்னை : தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் மக்கள
-
டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்த ஊழல் வழக்கு: அமலாக்க துறையின் சம்மனை புறக்கணித்தார் கெஜ்ரிவால்
18 Mar 2024புதுடெல்லி : டெல்லி குடிநீர் வாரிய ஒப்பந்தம் அளிக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சம்மன் அனுப்பியதை தொடர்ந்து அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முதல்வர் கெஜ்ர
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறை நீட்டிப்பு
18 Mar 2024சென்னை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 27-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதிய அரசின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
18 Mar 2024புதுடெல்லி : தேர்தலுக்கு பிறகு அமையும் புதிய அரசின் முதல் 100 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுக்குமாறு மத்திய அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டு
-
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழப்பு
18 Mar 2024பெஷாவர் : வடமேற்கு பாகிஸ்தானில் நேற்று காலை ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடைபெற்றது.
-
பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை இ.பி.எஸ்.யிடம் ஒப்படைப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையின் இறுதி தொகுப்பை அ.தி.மு.க.
-
டிராக்டருடன் கார் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி
18 Mar 2024பாட்னா : பீகாரில் டிராக்டருடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சபர்மதி- ஆக்ரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து : பெரும் உயிர்சேதம் தவிர்ப்பு
18 Mar 2024ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை
-
பாராளுமன்ற தேர்தல்: 24-ம் தேதி திருச்சியில் பிரசாரத்தை துவக்குகிறார் எடப்பாடி பழனிசாமி
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை வருகிற 24-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தொடங்குகிறார்.
-
திருச்செந்தூர் கோவிலில் ஓ.பி.எஸ். சிறப்பு வழிபாடு
18 Mar 2024திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
18 Mar 2024சென்னை : பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க.
-
கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: நேபாளத்தில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கைது
18 Mar 2024காத்மண்டு : தங்கம் கடத்தல் விவகாரத்தில் நேபாள நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ண பகதூர் மஹரா கைது செய்யப்பட்டுள்ளார்.