முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 75 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 309 ஆக உயர்வு: பீலா ராஜேஷ் தகவல்

வியாழக்கிழமை, 2 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 309-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் அவர் கூறினார். 

கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;-

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 264 பேருக்கு கொரோனா தொற்று இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 9000 என அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 86,432 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். நேற்று முன்தினம் 77,000-ஆக இருந்த வீட்டுக் கண்காணிப்பு, 86,342-ஆக அதிகரித்து விட்டது. தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்ட 75 பேரில் 74 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். எஞ்சிய ஒருவரும் டெல்லி சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் 1,103 பேருக்கும் சோதனை முடிந்து விட்டது. இன்னும் சிலருக்கு சோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த 309 பேரில் 264 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து