முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது; சமூக பரவலாக இன்னும் மாறவில்லை -சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2-ம் நிலையில் தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் தமிழகத்தில் சமூக பரவலாக மாறவில்லை என்று சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  

இந்நிலையில் தமிழக சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் யாருக்கும் அதிதீவிர சிகிச்சை தேவைப்படும் நிலையில் இல்லை.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 102 பேரில் 100 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள். ஒருவர் அமெரிக்கா சென்று வந்தவர். மற்றொருவரின் விவரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளவர்கள் எண்ணிக்கை 90,412 - ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பரவல் தடுப்பு வளையங்கள் உருவாக்கி நோயை கட்டுப்படுத்துகிறோம்.

கொரோனா தொற்றில் தமிழகம் இன்னும் 2-ம் நிலையில்தான் இருக்கிறது. தமிழகம் கொரோனா பரவல் நிலையில் 2-ம் கட்டத்தில்தான் உள்ளது. இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை.  டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1200 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சமூக விலகலை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். கோவை ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மாவட்ட வாரியாக சென்னையில் 81 பேரும், திண்டுக்கல்லில் 43 பேரும், நெல்லையில் 36 பேரும், கரூரில்  20 பேரும், மதுரையில் 15 பேரும், திருப்பத்தூரில் 10 பேரும், விருதுநகரில் 11 பேரும், திருவாரூரில் 12 பேர், சேலத்தில் 8 பேர், ராணிப்பேட்டையில் 5 பேர், கன்னியாகுமரியில் 5 பேர், சிவகங்கையில் 5 பேர், தூத்துக்குடியில் 9 பேர், விழுப்புரத்தில் 13 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர், திருவண்ணாமலை, ராமநாதபுரத்தில் தலா 2 பேர், கோவையில் 29 பேர், நாமக்கல்லில் 21 பேர், தேனியில் 21 பேர், செங்கல்பட்டில் 18 பேர் என பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து