முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக உயர்வு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

சீனாவில் தொடங்கி உலகை உலுக்கிய கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தீவிர முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் அடிப்படியில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கடந்த 4 நாட்களில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

தமிழகத்தில் இன்று (நேற்று) ஒரே நாளில் மட்டும் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ஆக அதிகரித்துள்ளது. 1,580 பேருக்கு கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3,684 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,780 பேருக்கு பாதிப்பு இல்லை. 7 பேர் வீடு திரும்பிய நிலையில் 484 பேரின் பரிசோதனை முடிவுகள் வரவுள்ளன. இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து