முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகவல்களை இனி ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் : வாட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடு

செவ்வாய்க்கிழமை, 7 ஏப்ரல் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி ஒரு நபருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும்.வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி 5 நபர்களுக்கு அனுப்ப முடியாது.

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால் அதையும் மீறி தொடர்ச்சியாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக வாட்ஸ் ஆப், முகநூல், டுவிட்டரில் தான் இந்த மாதிரியான தேவையில்லாத தகவல்கள் அதிகமாக பகிரப்படுகிறது.

இதனால் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து நிறைய அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் புதிய கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது. அதாவது ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் வரும் பெரிய கட்டுரை போன்ற மெசேஜ், குறுஞ்செய்திகள் இனி தனி நபர் ஒருவருக்கு மட்டும் தான் அனுப்ப முடியும். இதற்கு முன்பு 5 பேருக்கு அனுப்பலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது ஒருவருக்கு மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்பலாம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்திகளை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து