முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா சிகிச்சை: பிரிட்டன் பிரதமர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து மாற்றம்

வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானதையடுத்து, லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.போரிஸ் ஜான்சன் உடல் நிலையில் இரண்டாவது நாளாக முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றப்பட்டார். இது குறித்து மருத்துவ அதிகாரிகள் கூறும் போது,

போரிஸ் ஜான்சன் உடல்நிலை சீரானதைத் தொடர்ந்து வியாழக்கிழமை சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது போரிஸ் ஜான்சன் நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் போரிஸ் ஜான்சன் உடல் நிலை முன்னேற்றம் அடைந்திருப்பது சிறந்த செய்தி என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து