முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருப்பை ஸ்டெம்செல் மூலமாக குழந்தை பெற முடியும் ஆய்வில் தகவல்

புதன்கிழமை, 29 பெப்ரவரி 2012      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், பிப். - 29 - மலட்டு தன்மை காரணமாக சில பெண்கள் குழந்தையின்றி கஷ்டப்படுகின்றனர். அவர்களின் பிரச்சினைக்கு தீர்வாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கருப்பை ஸ்டெம்செல் மூலம் கரு முட்டைகளை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  அமெரிக்காவில் மசாகசெட் ஜெனரல் ஆஸ்பத்திரி நிபுணர்கள் எலியின் கருப்பையில் இருந்து ஸ்டெம்ஷெல்களை பிரித்தெடுத்தனர். அவற்றை மலட்டுத் தன்மையுள்ள எலிகளின் உடலில் செலுத்தினர். அது கரு முட்டைகளை உற்பத்தி செய்து எலிக்குட்டிகள் பிறந்தன. அதே முறையில் பெண்களுக்கும் பயன்படுத்தி குழந்தை பெற முடியும் என ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்