எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிஸ்பேன், மார்ச் - 5 - ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டியின் முதல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான காமன்வெல்த் பேங்க் சீரிஸ் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி கடைசி இடம் பிடித்ததால் போட்டியில் தோற்று வெளியேறியது. இதையடுத்து இந்த தொடரில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 3 போட்டிகளைக் கொண்ட பைனல் நடைபெறுகிறது. இதில் முதலாவது பைனல் நேற்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இரு அணிகளும் சம பலத்துடன் இருந்ததால் போட்டி ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் வார்னர் மற்றும் விக்கெட் கீப்பர் வாடே ஆகியோர் களமிறங்கினர். துவக்கத்தில் இருந்தே அதிரடியாக இந்த ஜோடி விளையாடி ரன் எண்ணிக்கையை உயர்த்தியது. இந்த ஜோடி முதல் 50 ரன்களை 40 பந்துகளில் எடுத்தது. அடுத்து 100 ரன்களை 106 பந்துகளில் எடுத்தது. 24 ஓவர்களில் ஆஸி. அணி 136 ரன்களை எடுத்திருந்தபோது 64 ரன்களை எடுத்திருந்த வாடே, குலசேகராவின் பந்தில் ஹெராத்தால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். இவரை அடுத்து ஆல்ரவுண்டர் வாட்சன் களமிறங்கினார். துவக்கத்தில் சற்று நிதானமான ஆட்டத்தை மேற்கொண்ட வார்னர், இதன் பிறகு அதிரடியை காட்ட ஆரம்பித்தார். வாட்சன் அதிரடியாக 25 பந்துகளில் 21 ரன்களை எடுத்து மகரூப்பின் பந்தில் திரிமன்னேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய கிறிஸ்டியன் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. 10 ரன்கள் எடுத்திருந்த கிறிஸ்டியன், பிரசாந்த்தின் பந்தில் சங்ககாராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய டேவிட் ஹஸ்ஸியும் 1 ரன்களை மட்டும் எடுத்து ஹெராத்தின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து அவுட்டானார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் வார்னர் அதிரடியாக சதமடித்தார். இவர் 111 ரன்களில் 100 ரன்களை எடுத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் வார்னருடன் சேர்ந்து அதிரடி காட்ட ஆஸியின் ரன் எண்ணிக்கை மளமளவென கூடியது. 25 பந்துகளில் 37 ரன்களை எடுத்த கிளார்க், மலிங்காவின் பந்தில் ஜெயவர்த்தனேவால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது ஆஸி. அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய மைக்கேல் ஹஸ்ஸி வார்னருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களை எடுத்தது. ஆட்டத்தின் கடைசி பந்தில் விக்கெட்டை பறிகொடுத்த வார்னர் 163 ரன்களை எடுத்தார். ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்களில் இவரது 163 ரன் 3 இடத்தை பெற்றது. ஹஸ்ஸி ஆட்டமிழக்காமல் 10 பந்துகளில் 19 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை தரப்பில் பிரசாத் 2 விக்கெட்டுகளையும், ஹெராத், குலசேகரா, மலிங்கா, மகரூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இலங்கை அணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை துவக்க வீரர்கள் தில்ஷன் மற்றும் ஜெயவர்த்தனா ஆகியோர் களமிறங்கினர். 4.4 ஓவர்களில் 39 ரன்கள் எடுத்திருந்தபோது 14 ரன்களை எடுத்திருந்த ஜெயவர்த்தனா பிரட்லீயின் பந்தில் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்து சங்ககாரா களமிறங்கினார். 7வது ஓவரில் தில்ஷனும் 27 ரன்கள் எடுத்த நிலையில் பிரட்லீயால் போல்டு செய்யப்பட்டார். அடுத்து வந்த சண்டிமால் 14 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் ஹஸ்ஸியின் பந்தில் பட்டின்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இலங்கை அணி 16.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து வந்த திரிமன்னேவும் 14 ரன்கள் எடுத்த நிலையில் ஹஸ்ஸியின் பந்தில் வாடேயால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து தரங்கா, சங்ககாராவுடன் ஜோடி சேர்ந்தார். நல்ல முறையில் ஆடிக்கொண்டிருந்த சங்ககாரா 42 ரன்கள் எடுத்த நிலையில் பிரட்லீ பந்தில் வாட்சனால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மகரூப்பும் 8 ரன்களே எடுத்து அவுட்டானார். அப்போது இலங்கை அணி 30.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் தரங்காவுடன் ஜோடி சேர்ந்த குலசேகரா அதிரடி காட்டினார். இதனால் இலங்கை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 43 பந்துகளில் 73 ரன்களை அடித்த குலசேகரா, டேவிட் ஹஸ்ஸியின் பந்தில் தோஹர்த்தியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது இலங்கை அணி 41.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து நம்பிக்கையுடன் விளையாடி வந்த தரங்காவும் 60 ரன்களை எடுத்திருந்தபோது வாட்சன் பந்தில் ஹஸ்ஸியால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இதையடுத்து பிரசாத் அதிரடியாக சில ஷாட்டுகளை விளையாடி இலங்கை அணி 300 ரன்களை கடக்க உதவினார். ஆனால் கடைசி கட்டத்தில் ஆஸி. வீரர்களின் பந்துவீச்சு நல்ல முறையில் இருந்ததால் டெயில் எண்டர்களால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியவில்லை. இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 306 ரன்களை எடுத்தது. பிரசாத் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் ஹஸ்ஸி 4 விக்கெட்டுகளையும், வாட்சன், பிரட்லி தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 163 ரன்களை குவித்த வார்னர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஆஸி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகளை கொண்ட இறுதிப் போட்டியில் 1 - 0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது இறுதி போட்டி நாளை (6.3.2012 )நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
சித்திரை திருவிழா: மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
18 Apr 2024மதுரை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் இன்று நடக்கிறது.