முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக கோப்பை கபடி: இறுதியில் இந்திய பெண்கள் அணி

திங்கட்கிழமை, 5 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பாட்னா, மார்ச் - 5 - மகளிர் உலகக்கோப்பை கபடி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான் அணியை சந்திக்கிறது. உலக கோப்பை மகளிர் கபடி போட்டி பீகாரின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வந்தது. இதன் அரை இறுதி போட்டி ஒன்றில் பலம்பொருந்திய ஈரான் மகளிர் அணி தாய்லாந்து அணியை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த போட்டியில் ஈரான் மகளிர் 20 - 11 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து அணியை வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தனர். மற்றொரு அரை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணியினர் ஜப்பான் மகளிர் அணியை சந்தித்தனர். இந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் 59 - 20 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பான் மகளிரை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். உலக கோப்பையை வெல்வது யார் என்ற போட்டியில் ஈரானும் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்