முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த தேர்தலில் கருணாநிதி கொடுத்த வாக்குறுதி என்னாச்சு?

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.26 - கடந்த சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வாக்காளர்களுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் தரப்படும் என்று அறிவித்த கருணாநிதி, அந்த திட்டத்தை அமுல்படுத்தவே இல்லை. 2 ஏக்கர் இலவச நிலம் 98 சதவீதம் விவசாயிகளுக்கு வழங்கப்படவே இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இலவச நிலம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் 98 சதவீத மக்கள் ஏமாந்ததுதான் மிச்சம். 

கடந்த 2006 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு வண்ண தொலைக்காட்சி இலவசமாக வழங்கப்படும் என்றும் கேஸ் அடுப்பு வழங்கப்படும் என்றும் நிலமில்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்படும் என்றும் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இலவச கலர் டி.விக்கள் எல்லாமே தி.மு.க.வினருக்கே வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. பொதுமக்கள் வெகுண்டு எழுந்த பிறகு அவர்களுக்கு இலவச டி.விக்கள் கொடுக்கப்பட்டன. 

ஆனால் இந்த டி.விக்கள் எல்லாம் திடீர் திடீரென மின் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறின. ஏற்கனவே டி.வி. வைத்திருந்தவர்கள் அரசு கொடுத்த டி.வியை வாங்கி பாதி விலைக்கு விற்று விட்டு போய் விட்டார்கள். ஆனாலும் இன்னமும் கூட 30 சதவீதம் பேருக்கு இலவச டி.விக்கள் வழங்கப்படவே இல்லை. அதனால் மக்கள் ஆத்ததிரத்தில் உள்ளனர். இதே போல கேஸ் அடுப்பும் அப்படித்தான். பெரும்பாலான மக்களுக்கு இலவச கேஸ் அடுப்பு வழங்கப்படவில்லை. இதையே கொடுக்காதவர்கள் 2 ஏக்கர் நிலத்தையா கொடுப்பார்கள். 

இது தொடர்பாக பிரச்சினை வந்த போது கொடுப்பதற்கு நிலமில்லை என்று கைவிரித்தார் கருணாநிதி. இதையும் மீறி 2 ஏக்கர் நிலத்தை பெற்ற விவசாயிகள் தி.மு.க.வினர்தான் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆக, 2 ஏக்கர் இலவச நிலம் திட்டம் 98 சதவீதம் தோற்றுப்போன ஒரு திட்டம். கருணாநிதி தான் அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலத்தை கொடுக்கவே இல்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கடந்த 5 ஆண்டு காலமும் மின்வெட்டு பிரச்சினைதான். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச மின்சாரமும் கொடுக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பல வகையில் பாதிக்கப்பட்டார்கள். மின்வெட்டு காரணமாக பல தொழில்கள் நசிந்து போயின. மின் உற்பத்தியை பெருக்க கருணாநிதி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தமிழகம் இருளில் மூழ்கிப்போனது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றாத தி.மு.க. அரசுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago