முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலாவலின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் செல்கிறார் ராகுல்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத், ஏப்.10 - பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் அழைப்பை ஏற்று பாகிஸ்தான் வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. பாகிஸ்தான் அதிபரான சர்தாரியின் மகன் பிலாவல், ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பிலாவல் இந்த அழைப்பை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட ராகுல் மீண்டும் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிலாவலை கேட்டுக் கொண்டார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிரின் மறைவுக்கு பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக பிலாவல் நியமிக்கப்பட்டார். முதல் முறையாக டெல்லி வந்த பிலாவல் பிரதமர் மன்மோகன்சிங்குடனும், ராகுல் காந்தியுடனும் இணைந்து விருந்தில் பங்கேற்றார். அந்த விருந்து சிறப்பாக இருந்தது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இந்த விருந்து உபயோகமாக இருந்தது என்றார் பிலாவல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்