எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாகர்த்தா,ஏப்.12 - இந்தோனேஷியாவில் மீண்டும் பூகம்பம். இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. கட்டிடங்கள் குலங்கின. வீடுகளில் இருந்து மக்கள் அலறிக்கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையொட்டி முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருந்தபோதிலும் சுனாமி பீதியில் மக்கள் உள்ளனர்.
இந்தியாவுக்கு கிழக்கே இந்தோனேஷியா அமைந்துள்ளது. இந்த நாடு அடிக்கடி பூகம்பம் ஏற்படும் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டு சுனாமி வீசியதில் அந்த நாட்டில் லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அந்த சுனாமி இந்தியாவையும் தாக்கியது. சுனாமியில் அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் தமிழகம் குறிப்பாக நாகைப்பட்டினம், கடலூர், சென்னை மற்றும் தமிழக கடல் பகுதியில் உள்ள நகரங்கள், ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். அதன் பின்னர் சுமத்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்பட்டது. ஆனால் அந்த நிலநடுக்கம் அதிக அளவில் இல்லை.
இந்தநிலையில் நேற்று இந்தோனேஷியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது. இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுப்பகுதியில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் தொடர்ந்து 4 நிமிடங்கள் நீடித்தது என்று நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாண்டா தீவுப்பகுதிகளில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பூகம்பத்தால் பயந்துபோன மக்கள் அலறியடித்துக்கொண்டு பெரும் பீதியில் வீடுகளில் இருந்து தெருக்களுக்கு ஓடி வந்துள்ளனர் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. முதலில் நேற்றுக்காலையில் இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 8.7 ஆக பதிவாகி இருந்தது. இதனையொட்டி இந்துமகா சமுத்திரப்பகுதி முழுமைக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இந்தியாவின் கடல்பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அந்தமான் நிகோபர் தீவுப்பகுதிகளுக்கு முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடல் பகுதி தகவல் மையமான இந்திய தேசிய மையம் இந்த எச்சரிக்கையை விடுத்தது. சுனாமி பெரிய அளவில் சுனாமி தாக்கும் என்றும் இந்த மையம் எச்சரித்தது. இதனையொட்டி மேற்குவங்காளம், ஒரிசா, ஆந்திர, தமிழகம். கேரள ஆகிய மாநிலங்களில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மக்கள் உஷார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் நிகோபர் தலைநகரான போர்ட்பிளேயருக்கு 2 விமானங்களில் விமானப்படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். 5 டன் நிவாரணப்பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன. அண்டை நாடுகளான இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இலங்கையில் தலைநகர் கொழும்பில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அதனால் மக்கள் அலறயடித்துக்கொண்டு தெருக்களுக்கு ஓடி வந்தனர். தாய்லாந்து நாட்டில் உள்ள புகெத் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் இந்த நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதால் அந்த நாட்டு மக்கள் பெரும் கவலையிலும் பீதியிலும் உள்ளனர். அங்கு கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியில் சுமார் 2 லட்சம் பேர் பலினார்கள். அதேமாதிரி இந்தத்தடவையும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தபோது உறவினர்கள், உடன்பிறப்புக்கள் இருக்கிறார்களை என்று தேடிக்கொண்டு வந்தனர். அப்போது இறைவனை அவர்கள் வழிபட்டு எங்களை காப்பாற்று என்று கூறினர். ஒருசில மக்கள் கடவுள் மிகப்பெரியவர், கடவுள் மிகப்பெரியவர் என்று கூறிக்கொண்டே வந்தனர். நேற்று ஏற்பட்ட இந்த பூகம்பத்தின் அளவு ரிக்டரில் 8.6 ஆக பதிவாகி இருந்தது என்று அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. ஆசெஹ் தீவுப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் சுமார் 430 கிலோ மீட்டர் தூரத்திற்கு பூகம்பம் மையம் கொண்டியிருந்தது என்றும் அந்த ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியா, இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா, மியான்மர், தாய்லாந்து, மாலத்தீவு, இந்துமகா சமுத்திர தீவுகள், மலேசியா, பாகிஸ்தான், சோமாலியா, ஓமன், இரான், வங்கதேசம், கென்யா, தென்னாப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சுனாமி தாக்குதல் இருக்கலாம் என்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ள ஹவாலி சுனாமி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதை அமெரிக்க பூகம்ப ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது. இந்தோனேஷியா பகுதி கடலில் அலைகள் 7 அடி உயரம் வரை வீசியது. ஆனால் பூகம்பத்தால் பெரிய அளவில் சேதம் இல்லை என்று முதலில் வந்த தகவல்கள் கூறுகின்றன. இருந்தபோதிலும் இரண்டாவது தடவையாக இந்தோனேஷியா சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. சுமத்ரா, மென்தவாய் தீவுப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி இந்தோனேஷியா நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பூகம்பத்தின்போது மண்சரிவு செங்குத்தாக இல்லாமல் சரிவாக இருந்ததால் அதிக அளவு கடல் தண்ணீரை தள்ளி சுனாமியை ஏற்படுத்தாது என்றும் பூகம்ப ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவை அடுத்து மலேசியா,சிங்கப்பூர், தாய்லாந்து வங்கேதசம், இந்தியா ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 39 sec ago |
பெப்பர் சிக்கன்5 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
27 Mar 2024மதுரை : மதுரையில் அ.தி.மு.க.வேட்பாளர் டாக்டர் சரவணை ஆதரித்து பழங்காநத்தத்தில் இன்று எடப்பாடி பிரச்சாரம் செய்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.
-
வி.சி.க.வுக்கு பானை சின்னம் வழங்க தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு
27 Mar 2024புதுடெல்லி : பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்
27 Mar 2024ஐதராபாத் : நடிகை அதிதி ராவை கரம் பிடித்தார் நடிகர் சித்தார்த்.
-
பா.ம.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
27 Mar 2024சென்னை : தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீதம் பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வர வலியுறுத்தப்படும் என பாமக தேர்தல் அறிக்கையில் தெரிவ
-
தமிழ்நாட்டின் பெயரை மாற்ற தடுக்க முயற்சித்தவர் கவர்னர் : அரக்கோணம் பிரசாரத்தில் உதயநிதி குற்றச்சாட்டு
27 Mar 2024ராணிப்பேட்டை : தமிழ்நாட்டின் பெயரை மாற்றவும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இசைப்பதை தடுக்கவும் முயற்சித்தவர் கவர்னர் என்று அரக்கோணத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் உதயநிதி ஸ்ட
-
தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் : மனு தாக்கலுக்கு பிறகு டி.டி.வி.தினகரன் பேட்டி
27 Mar 2024தேனி : தேனி தொகுதிக்கான நலத்திட்டங்களை பிரதமரிடம் கேட்டு பெற்றுத்தருவேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 24 பேர் கைது
27 Mar 2024சென்னை : ஐ.பி.எல்.
-
சிறப்பாக செயல்பட்டோம்: கெய்க்வாட்
27 Mar 2024குஜராத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே.
-
ஐ.பி.எல் கிரிக்கெட்: சி.எஸ்.கே. 2-வது வெற்றி
27 Mar 2024சென்னை : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்று தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்? - 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' முயற்சி கைகூடுமா?
27 Mar 2024மெல்போர்ன் : நவம்பர் மாதம் இரண்டு அணிகளும் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறது. அப்போது நடத்த ஆஸ்திரேலியா விரும்புகிறது.
-
பந்துவீச தாமதம்: சுப்மன் கில்லுக்கு அபராதம்
27 Mar 2024சென்னை : சென்னைக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் குஜராத் அணி கேப்டன் கில்லுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.