முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: ஜர்தாரிக்கு மன்மோகன் அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மார்ச்.- 27 - இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் அதிபர் கிலானி மற்றும் அந்நாட்டு அதிபர் ஜர்தாரி ஆகியோருக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்துள்ளார். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. வரும் 30 ம் தேதி நடக்கும் இந்த போட்டியை மன்மோகன்சிங் நேரில் காண திட்டமிட்டுள்ளார். 

இந்த நிலையில் இந்த போட்டியை காண நேரில் வருமாறு ஜர்தாரி, கிலானி ஆகியோருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மும்பை தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிரதமரின் இந்த அழைப்பு இரு தரப்பு உறவுகளில் புதிய மலர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் பிரதமர், அதிபர் யாரும் இந்தியாவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்