முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன் அலியின் மனைவி ரீமா இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜர்

திங்கட்கிழமை, 28 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் - 28 - கறுப்பு பண வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ள ஹசன் அலியின் மனைவி ரீமா கான் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகிறார். கறுப்பு பண வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ள புனேயைச் சேர்ந்த  தொழில் அதிபர் ஹசன் அலிகான் தற்போது மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு விசாரணையை மத்திய அமலாக்கப் பிரிவினர் நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹசன் அலியின் மனைவி ரீமா கானுக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி வருகிற ஏப்ரல் 1 ம் தேதி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ரீமா ஆஜராக இருக்கிறார். 

இது தொடர்பாக ரீமா கான், அமலாக்கப்பிரிவு  தலைமையகத்திற்கு பேக்ஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஹசன் அலிக்கு வருகிற ஏப்ரல் மாதம் 8 ம் தேதி வரை நீதிமன்ற காவல்  விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹசன் அலிக்கு எதிரான வழக்கு விசாரணை எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இன்று சுப்ரீம்  கோர்ட்டில் விசாரணை குறித்த அறிக்கையை  தாக்கல்  செய்ய இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஹசன்அலியின் மனைவி ரீமா கான் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகிறார்.

இந்த விவரத்தை ஹசன் அலியின் வக்கீல் பகாடியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்