முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சஞ்சய்தத்துக்கு கைது வாரண்ட்

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை, மார்ச்.29 - தேர்தல் நடத்தை விதிமுறைகளை பற்றிய குற்றத்திற்காக நடிகர் சஞ்சய்தத்திற்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ல் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது உத்தர பிரதேசத்தில் நடத்தை விதிமுறைகளை மீறி மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசிய வழக்கில் நடிகர் சஞ்சய்தத் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அவருக்கு ஜாமீனில் வரக் கூடிய வாரண்டை மாவ் நகர குற்றவியல் மாஜிஸ்திரேட் கிருஷ்ணகுமார் பிறப்பித்தார். 

சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் அர்ஷத்கமாவிற்கு ஆதரவாக பேசிய பிரச்சார கூட்டத்தில் தன்னுடைய தாய் முஸ்லீம் என்பதால் போலீஸ் காவலில் தனக்கு மூன்றாம் தர மரியாதையே கிடைத்ததாக குறிப்பிட்டிருந்தார். தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த குற்றத்திற்காக மும்பையில் சிறையில் இருந்த போது நடந்த நிகழ்ச்சியை சஞ்சய்தத் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்