முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமுறை மீறல் - நடிகை குஷ்பு மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 29 மார்ச் 2011      சினிமா
Image Unavailable

 

தேனி,மார்ச்.29 - தேனி மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை குஷ்பு மீது தேர்தல் விதிமுறை மீறியதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட 8 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகை குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். ஆண்டிபட்டியில் பிரச்சாரத்துக்கு முன் அனுமதி பெறவில்லை என்றஉம், தேர்தல் விதிமுறையை மீறி பஸ் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் பறக்கும் படை அலுவலர் மாதேஸ்வரன், ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் நடிகை குஷ்பு ஆண்டிபட்டி தொகுதி வேட்பாளர் மூக்கையா, நகர செயலாளர் காந்தி, ஒன்றிய செயலாளர் வைகை சேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதே போல் பழனிசெட்டிபட்டி பிரதான சாலையில் முன் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக குஷ்பு போடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன், பேரூர் கிளை செயலர் உதயசூரியன் ஆகியோர் மீது பழனிசெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்