எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே 25 - ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்தியன் பிரீமியர் லீக்கின் 5-வது போட்டித் தொடர் இந்தியாவின் முன்னணி நகரங்களில் கடந்த சில மாதங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை அணிகள் தங்களுக்குள் இறுதி போட்டிக்கு செல்வது யார் என்ற பலப்பரீட்சையில் இறங்கின. இதில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று முதலாவதாக இறுதிப் போட்டியில் நுழைந்தது. அடுத்ததாக மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்த அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணியை வென்று இறுதிப் போட்டிக்கான தனது வாய்ப்பை சரியான நேரத்தில் எழுச்சிகண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைத்துக்கொண்டது. சென்னை அணிக்கும், டெல்லி அணிக்கும் இடையில் இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணியே 27 ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
லீக் போட்டிகளில் சுமாராக செயல்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லீக் போட்டியில் முதலிடத்தை பெற்ற டெல்லி அணியும் இன்று சென்னையில் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. தற்போதைய நிலையில் இரண்டு அணிகளுமே பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சமபலம் வாய்ந்த அணிகளாகவே திகழ்கின்றன. இதில் சென்னை அணி சொந்த மண்ணில் விளையாடுவது அதற்கு கூடுதல் பலம் ஆகும்.
சென்னை அணியின் லீக் சுற்றுக்களில் ஆரம்பத்தில் சற்று தடுமாறிய கேப்டன் தோனி தற்போது நல்ல பார்மிற்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் தெம்பை அளித்திருக்கிறது. அதிலும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் தோனி அடித்த 51 ரன்களே சென்னை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது என்றால் அது மிகையாகாது. சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் பார்மிற்கு திரும்பும் பட்சத்தில் சென்னை அணி இறுதிப்போட்டிக்கு செல்லும்வாய்ப்புகள் மிக அதிகம்.
டெல்லி அணி லீக் போட்டிகள் 16 இல் 11 போட்டிகளை வென்று 22 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்ற அணி. அந்த அணியில் சேவாக், பீட்டர்சன், மகேளா ஜெயவர்த்தனே, நமன் ஓஜா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடும் பட்சத்தில் மிகப்பெரிய இலக்கையும் அவர்களால் எட்ட முடியும். டெல்லி டேர்டெவில் அணியின் பவுலர்களும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக மோர்னே மோர்கெல், உமேஷ்யாதவ், இர்பான் பதான் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர்.
சென்னை அணியில் மைக்கேல் ஹஸ்ஸி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, ரவீந்திர ஜடேஜா, பிராவோ, அல்பி மோர்கெல் என வரிசையாக பேட்ஸ்மேன்களாக உள்ளனர். பந்துவீச்சில் மும்பைக்கு எதிரான போட்டியில் அல்பி மோர்கெலின் பந்துவீச்சு சென்னை அணிக்கு பக்கபலமாக அமைந்தது.
கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறையும் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற நம்பிக்கை தற்போது பெருமளவில் ஏற்பட்டுள்ளது. டெல்லி அணியும் தற்போதைய நிலையில் சளைத்த அணியாக இல்லை. அந்த அணிக்கும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு சம அளவில் உள்ளது. இரண்டு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? என்ற விதத்தில் இந்த போட்டி அமைந்துள்ளது. இறுதிப் போட்டிக்கு இணையான இந்த போட்டி சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக அமையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,