முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாமில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும் சுஷ்மா நம்பிக்கை

வியாழக்கிழமை, 31 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி,மார்ச்.- 31 - அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. தனித்து ஆட்சியமைக்க முயன்று வருவதாக அக்கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் அரசாட்சியில் மக்கள் மிகுந்த வெறுப்பும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர். இதை மாற்றுவதுதான் பா.ஜ.க. வின் முக்கிய நோக்கம். அதற்காக தனித்து ஆட்சியமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் கடந்த முறை பா.ஜ.க. 10 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் தனித்து வெற்றி பெறுவது என்று இலக்கு எட்ட முடியாததாக உள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பீகாரில் பா.ஜ.க.வின் வாக்கு வங்கி 90 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது. பஞ்சாபில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 19 இடங்களை பிடித்துள்ளோம். அசாமிலும் மக்கள் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புவதாக அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்