முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரு ஹெலிகாப்டர் விபத்து: 8 கொரியர்கள் உட்பட 14 பேர் பலி

திங்கட்கிழமை, 11 ஜூன் 2012      உலகம்
Image Unavailable

ஹெளலா-ஹெளலா, ஜுன் - 11- பெரு நாட்டில் மலையில் மோதி ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்ததில் அதில் பயணம் செய்த 14 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் அமெரிக்க நாடான பெருநாட்டில் அமேசான் வனப்பகுதியில் மாட்ரீ டி டையோஸ் நகரில் இருந்து கஸ்கோ என்ற நகருக்கு 14 பயணிகளுடன் ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. மமாரோசா பகுதிக்குச் சென்றபோது பனிமூட்டம் காரணமாக மலை ஒன்றின் மீது ஹெலிகாப்டர் மோதி வெடித்தது. இதில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து தூள்தூளாக  சிதறியது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இதில்  ஹெலிகாப்டர் ஊழியர்கள் 2 பேர் பெருநாட்டை சேர்ந்தவர்கள். பயணிகளில் 8 பேர் தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர்  ஐரோப்பியர்கள். பலியான கொரிய நாட்டவரில் மூவர் சாம்சங் நிறுவன பணியாளர்கள் என்றும், மற்றொருவர் கொரியாவின் அரசு அதிகாரி என்றும் கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்