முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்துக்கு அப்பாற்பட்டவராம் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி

செவ்வாய்க்கிழமை, 3 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை. - 3 - பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று அந்நாட்டு புதிய பிரதமர் ராஜா பர்வீஸ் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.  சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு ஏற்பது தொடர்பாக வரும் 12 ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அஷ்ரப்புக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  ஜனநாயக முறையில் பாகிஸ்தான் அதிபராக ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே பதவிக்காலம் முடியும் வரை அவர் சட்டங்களுக்கு அப்பாற்பட்டவர். இந்த விஷயத்தில் சட்ட வல்லுனர்களும் இதே கருத்தைத் தான் தெரிவித்துள்ளனர் என்றார். நீதிமன்றம் அதிக அதிகாரம் செலுத்துகிறது என்பதை மறைமுகமாக குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நீதித்துறை அதிகம் தாக்குதலுக்கு உள்ளான போது மக்கள் சக்தியும், நாடாளுமன்றமும் அதனை காக்க முன்வந்தன. இப்போது நாடாளுமன்ற ஜனநாயகம் தாக்கப்படுகிறது. அதனை காக்க மக்கள் முன்வருவார்கள் என்றார். ஜர்தாரி மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணையை மீண்டும் தொடங்குமாறு சுவிட்சர்லாந்து அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவீர்களா என்று கேட்டதற்கு இதற்கான பதிலை வரும் 12 ம் தேதி தெரிவிப்பேன் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்