முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிளிநொச்சியில் ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 4 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

கிளிநொச்சி, ஜூலை. - 4 - விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியில், பெரும் ஆயுதக் குவியலை கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பின் நிர்வாகத் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி. ்ஈழத்தில் உள்ள இந்த நகரானது தற்போது பெரும் சுடுகாடாக மாறிப் போய் விட்டது. ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிளிநொச்சியில் இலங்கை ராணுவம் ஆடிய வெறியாட்டத்தில் நகரமே சின்னாபின்னமாகி விட்டது. இந்த நிலையில் கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியலைக் கண்டுபிடித்திருப்பதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. அந்த ஆயுதங்களில் 2 லட்சம் ரவுண்டு வரை சுடக் கூடிய துப்பாக்கி குண்டுகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் இருப்பதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்