முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்தாரி மீதான வழக்கை விசாரிக்க பெஞ்ச் அமைப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜூலை. 10 - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் விசாரிப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக 5 நீதிபதிகள் அடங்கிய பெரிய பெஞ்ச்சை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையில் அமைத்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உத்தரவிட்டார். பாகிஸ்தான் அதிபராக இருக்கும் சர்தாரி மீது ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்குமாறு கோரி சுவிஸ் அரசுக்கு கடிதம் எழுதுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன் படி சுவிஸ் அரசுக்கு கடிதம் எழுத முன்னாள் பிரதமர் கிலானி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அவர் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். புதிய பிரதமராக பர்வேஸ் அஸ்ரப் பொறுப்பேற்றார். இந்நிலையில் அதிபர் சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் துவக்கி நடத்தும் விவகாரத்தில் அரசின் நிலை என்ன என்பதை வரும் 12 ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு பிரதமர் அஸ்ரப்புக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும் 12 ம் தேதி பிரதமருக்கு பதில் அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜராக சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்