முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., வீரர்கள் மீது தாக்குதல் தொடரும்: தலிபான்

வியாழக்கிழமை, 12 ஜூலை 2012      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,ஜூலை.12 - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீதும் முக்கிய இடங்களிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பாஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜராத் நகரில் உள்ள ராணுவம் முகாம் மீது கடந்த 9-ம் தேதி தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 8 வீரர்கள் பலியானார்கள். ஆப்கானிஸ்தானுக்கு நேட்டோ நாடுகளின் ராணுவ வாகனங்கள் செல்ல மீண்டும் சாலையை பாகிஸ்தான் அரசு திறந்துவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தாக்குதலை தலிபான் தீவிரவாதிகள் நடத்தினர். இதேமாதிரி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீதும் முக்கிய இடங்களிலும் தாக்குதலை தொடர்ந்து நடத்துவோம் என்று பாகிஸ்தான் அரசுக்கு தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்தினர் கடந்த பல நாட்களுக்கு முன்பு பீர்சம்பல் பகுதியில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். தலிபான் இயக்கத்தினர் துண்டுபிரசுரங்களை வீசி உள்ளனர். அதில் ஆப்கானிஸ்தானுக்கு நேட்ட படைகள் செல்லும் சாலையை மூட வேண்டும். இல்லாவிட்டால் கடந்த 9-ம் தேதி நடத்திய தாக்குதல் மாதிரியே தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம். அதோடு மட்டுமல்லாது அரசுக்கு சொந்தமான முக்கியமான இடங்களிலும் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்