முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா உதவியாளர் கைது

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

கொல்கத்தா,பிப்.21  - வருவாய்க்கு மீறி ரூ 2 ஆயிரத்து 500 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வங்கிகளில் ரகசியமாக முதலீடு செய்துள்ளார் என்ற புகாரின் பேரில் நீதிமன்ற காவலில் உள்ள ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவின் உதவியாளர் விஜய் ஜோஷி கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார். 

பவ் பஜாரில் அவரை ராஞ்சி மாநில போலீசார் கைது செய்தனர். அப்போது அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் உடனிருந்தனர். கைதான உடனே தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் கூறவே போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜய் ஜோஷியை சி.பி.ஐ. அதிகாரிகள் சென்று பார்த்தனர். கடந்த 2009 நவம்பர் 30 ம் தேதி மதுகோடா கைது செய்யப்பட்டார். பதவியில் இருந்த போது ரூ 2 ஆயிரத்து 500 கோடிக்கு சொத்து சேர்த்து அவற்றை வங்கி கணக்குகளில் முதலீடு செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்