முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை கடத்தி தீவிரவாத பயிற்சி அளிக்கும் அல்-கொய்தா

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2012      உலகம்
Image Unavailable

 

சோமாலியா, ஆக.- 14 - தற்கொலைப் படை வீரர்களாக உருவாக்குவதற்காக சோமாலியாவில் சிறுவர்களை அல் கொய்தா கடத்தி பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சோமாலிய தலைநகர் மொகாதிசுவில் தனி அறைகளில் வரிசையாக படுக்கைகள் போடப்பட்டு 7 வயதுக்கும் குறைவானவ சிறுவர்கள், கட்டிப் போடப்பட்டுள்ளனர். மேற்கு நாடுகளில் எதிர்காலத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பயிற்சிகளை அல்-கொய்தாவின் சோமாலிய துணை அமைப்பான அல் ஷபாப் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமல் டிமிக்கி அடிப்பதைத் தடுக்கவே, இவ்வாறு கட்டிப் போடப்பட்டுள்ளதாக அந்தப் பள்ளி நிர்வாகம் கூறுகிறது. ஆனால், இதை யாரும் நம்பவில்லை. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தப் பயிற்சிகளை அளித்த சுமார் 200 பேரை சோமாலிய அரசும் அந்த நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஆப்பிரிக்க யூனியன் படைகளும் கைது செய்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்