எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.- 7 - பாரத ரத்னா விருதுக்கு சச்சின் தென்டுல்கர் 200 சதவீதம் தகுதியானவர் என தோனி கூறினார்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது ஐ.பி.எல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும், 3-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.
4-வது ஐ.பி.எல் 20 ஓவர் போட்டி வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை 50 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது. இதுவரை நடந்த போட்டியில் 8 அணிகள் பங்கேற்றன.
தற்போது நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் கூடுதலாக கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
ஐ.பி.எல் போட்டியின் தொடக்க ஆட்டம் நாளை(8ம் தேதி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
4-வது ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங், அணி உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் காமிக்ஸ் புத்தகம், புதிய விற்பனை பொருட்கள், வீரர்கள் அணியும் டி சர்ட்ஸ் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டது.
பின்னர் தோனி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 3 ஐ.பி.எல் போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக ஆடியது. அணியின் இடம் பெற்ற பெரும்பாலான வீரர்கள் மீண்டும் இடம் பெற்று உள்ளனர். சிறந்த சுழற்பந்து வீச்சாளரான முரளீதரன் அணியில் இல்லை. அவர் இல்லாதது இப்போது வறுத்தமாக இருக்கிறது. அவர் சிறந்த ஆலோசகராக இருந்தார்.
சென்னை அணியிலுள்ள 24 வீரர்களும் முழு உடல் தகுதியுடன் உள்ளனர். அணி சிறப்பாக உள்ளது. பேட்டிங் வரிசையிலும் பலம் பொருந்தியுளளது.
நான், மைக்ஹசி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், அல்பி மார்க்கெல், பத்ரிநாத் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் இருக்கிறோம். எனவே இந்த ஐ.பி.எல் போட்டியிலும் எங்கள் அணி சிறப்பாக ஆடும். தொடக்க வீரர் யார் என்று இன்னும் முடிவு செய்யவில்லை. ஹசி, அனிருதா ஸ்ரீகாந்த், பத்ரிநாத் ஆகியோர் தொடக்க வரிசையில் ஆடும் திறமை வாய்ந்தவர்கள்.
பாரத ரத்னா விருதுக்கு தென்டுல்கர் 200 சதவீதம் பொருத்தமானவர். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். 21 ஆண்டுகளாக விளையாடி அவர் புதிய சகாப்தம் படைத்துள்ளார். தென்டுல்கர் என்னை சிறந்த கேப்டன் என்று பாராட்டி உள்ளார். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு தோனி கூறினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், ரிதிமான் சாகா, ஆர்.அஸ்வின், எஸ்.பத்ரிநாத், ஜொகிந்தர் சர்மா, சுதீப் தியாகி, அபினவ் முகுந்த், அனிருதா ஸ்ரீகாந்த், கணபதி விக்னேஷ், வாசுதேவதாஸ், சதாப் ஜகாதி, யோமகேஷ், ஆல்பி மார்கல், மைக்கேல் ஹசி, ட்வைன் பிராவோ, பொலிங்கர், ஸ்காட் ஸ்டைரிஸ், டிம் செளதி, நுவான் குலசேகரா, சூரஜ் ரந்தீவ், ஜார்ஜ் பெய்லி, பாப் டு பிளசிஸ்.
4-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் ஆட்டம் வருமாறு:-
ஏப்ரல் 8 - கொல்கத்தா நெட் ரைடர்ஸ் - சென்னை - இரவு 8 மணி,
ஏப்ரல் 13 - கிங்ஸ் லெவன் பஞ்சாய் - மொகாலி - மாலை 4 மணி,
ஏப்ரல் - 16 - ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை - மாலை 4.00 மணி,
ஏப்ரல் 18 - கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - கொச்சி - இரவு 8.00 மணி,
ஏப்ரல் 22 - மும்பை இந்தியன்ஸ் - மும்பை - இரவு 8.00 மணி,
ஏப்ரல் 25 - புனே வாரியர்ஸ் - சென்னை - இரவு 8.00 மணி,
ஏப்ரல் 27 - புனே வாரியர்ஸ் - நவிமும்பை - மாலை 4.00 மணி,
மே 1 - டெக்கான் சார்ஜர்ஸ் - சென்னை - இரவு 8.00 மணி,
மே 4 - ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை - மாலை 4.00 மணி,
மே 7 - கொல்கத்தா நெட் ரைடர்ஸ் - கொல்கத்தா - மாலை 4.00 மணி,
மே 9 - ராஜஸ்தான் ர ஆயல்ஸ் - ஜெய்ப்பூர் - இரவு 8.00 மணி,
மே 12 - டெல்லி டேர்டெவில்ஸ் - சென்னை - இரவு 8.00 மணி,
மே 18 - கொச்சி டஸ்கர்ஸ் கேரளா - சென்னை - இரவு 8.00 மணி,
மே 22 - ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் - பெங்களூர் - மாலை 4.00 மணி.
ஐ.பி.எல் போட்டியில் 9 ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. சூப்பர் கிங்ஸ் மோதும் 7 லீக் ஆட்டமும், இறுதிப்போட்டிக்கான 2வது தகுதி ஆட்டம் மே 27ம் தேதியும், இறுதிப்போட்டி மே 28ம் தேதியும் சென்னையில் நடைபெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.