முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கஜகஸ்தானில் மன்மோகன் சிங்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

சான்யா,ஏப்.16 - பிரதமர் மன்மோகன் சிங் சீன பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றுக்காலையில் கஜகஸ்தானுக்கு புறப்பட்டு சென்றார். சீனாவின் கிழக்கு கடற்கரை நகரான சான்யாவில் பிரேசில்,ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் (பிரிக்ஸ்) மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரண்டாவது கட்ட பயணமாக கஜகஸ்தான் நாட்டிற்கு புறப்பட்டு பிரதமர் மன்மோகன் சிங் சென்றார். முன்னாள் சோவியத் யூனியனில் பிரிந்த நாடுதான் கஜகஸ்தான். இது மத்திய ஆசிய பகுதியில் இருக்கிறது. கஜகஸ்தான் நாட்டிற்கு மன்மோகன் சிங் தற்போதுதான் முதன் முதலாக செல்கிறார். 

கஜகஸ்தான் நாடானது சிவில் அணுசக்தி துறையில் முன்னேறிய நாடாகும். அந்த நாட்டுடன் இந்தியா அணுசக்தி துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளது. அதன் அடிப்படையாக சிவில் அணுசக்தி துறையில் இந்தியாவும் கஜகஸ்தானுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மன்மோகன் சிங்கின் இந்த பயணத்தால் ஏற்படும் என்று தெரிகிறது. இதைத்தவிர பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளிலும் இருநாடுகளிடையே ஒப்பந்தம் ஏற்பட உள்ளது. இந்த ஒப்பந்தங்கள் ஏற்படுவதற்கு முன்பு கஜகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நாஸர்பாயேவ் பிரதமர் கரீம் மாஸிநோவ் ஆகியோர்களை மன்மோகன் சிங் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தீவிரவாதிகளை ஒடுக்குவதில் கஜகஸ்தான் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களை மன்மோகன் சிங் கேட்டுக்கொள்வார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்