முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே டூவீலர் மீது பஸ் மோதியதில் ஒருவர் பலி

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,ஏப்.16 - மேலூர் அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் ஒருவர் பலியானார்.மேலூர் அருகே உள்ள ஏ. வெள்ளாளபட்டி நெவிலிக்கண்மாய் வளைவில் அழகர் கோவிலில் இருந்து மேலூர் நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. மேலூரில் இருந்து மதுரை புதூர் பகுதிக்கு சென்ற இரு சக்கர வாகனமும் நெவிலிக்கண்மாய் வளைவில் வந்த போது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் புதூர் பாண்டியன் நகரை சேர்ந்த பெரியகாரணம்(40) பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மேலவளவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்