எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேட்டுப்பாளையம்,பிப்.21 - ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அனைவரும் கைதாகும் வரை அ.தி.மு.க. ஓயப்போவதில்லை என்று மேட்டுப்பாளையத்தில் பி.எச். பாண்டியன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பருத்தி, பட்டு நூல் ஏற்றுமதியை தடுக்க வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் மேட்டுப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ம. வேலுச்சாமி, தா. மலரவன், ஓ.கே. சின்னராசு, பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் ஏ.கே. செல்வராஜ் உள்ளிட்ட அனைவரும் கண்டன உரை நிகழ்த்தினர். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இன்று வரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் மார்க்கெட் பகுதிகளில் நகராட்சியே ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளது. மின்மயான பணிகளை நிறைவேற்றத் தவறியது, மேலும் மத்திய, மாநில அரசின் மெத்தனப் போக்கு உள்ளிட்டவற்றை கண்டித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பல கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.எச். பாண்டியன் கூறியதாவது,
வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் 2 ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடைய அனைவரும் சிறையினுள் தள்ளப்படப் போவது உறுதி. இவ்விவகாரத்தில் லாபமடைந்த முக்கிய நபர்கள் அனைவரும் கைது செய்யப்படும் வரை நாங்கள் ஓயப் போவதில்லை. 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என கைது செய்யப்பட்ட சத்யம் நிறுவன ராஜூ இன்று வரை சிறையில் இருந்து வெளிவர இயலவில்லை எனும் போது ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி முறைகேட்டிற்கு எப்போது சிறையில் இருந்து வர முடியும் என நாம் கணக்கிட்டு கொள்ளலாம்.
தி.மு.க.வின் இந்த உலக மகா ஊழலால் தமிழக மக்கள், தமிழக அரசு, தமிழக சட்டமன்றம், இந்திய பாராளுமன்றம் மொத்தத்தில் இந்தியாவே தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று திருச்சியில் நடந்த ஒரு நீதிமன்ற விழாவில் தமிழக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட அமைச்சர் மற்றும் பிற அமைச்சர்கள் முன்னிலையில் பேசியது குறித்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது.
அதில் நீதிமன்ற பணிகளில் பொதுப்பணித்துறை 60 சதவீத பணிகளையாவது ஒழுங்காக செய்ய வேண்டும். நீதிமன்ற கட்டிட பணிகளில் கமிஷன் பெறாமல் பணிகள் நடைபெற வேண்டும் என்று தமிழக தலைமை நீதிபதியே அனைவரின் முன்னிலையிலும் பேசியுள்ளார். ஆகவே இங்கு நடைபெறும் அனைத்து பணிகளும் கமிஷன் மூலமாகவே நடைபெறுகிறது என அரசுக்கு வேதனையுடன் நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று ஆட்சி பீடத்தில் ஏறும் என்றார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.பி. ராஜூ, எல். சுலோசனா மற்றும் ஒன்றிய செயலாளர் கந்தசாமி, நகர செயலாளர் மைதீன்சேட், நிர்வாகிகள் பி.ஆர்.சி. அருண்குமார், ராஜ்குமார், முன்னாள் எம்.பி. கிருஷ்ணன், காட்டூர் செல்வராஜ், இளைஞரணி ராஜ்குமார், மருத்துவரணி டாக்டர் கணேசன், கிருஷ்ணசாமி, சிவசாமி, வேணுகோபால், ஜெயராமன்,இந்திராணி, மணிமேகலை மகேந்திரன், பழனிச்சாமி, ரேணுகாராஜன், ஆறுமுகசாமி, நாசர், பாலன், சந்தானம், வெள்ளியங்கிரி உட்பட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். காரமடை ஒன்றிய செயலாளர் பி.டி. கந்தசாமி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.