முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்ஸில் தீ விபத்து: 7 பேர் சாவு

வியாழக்கிழமை, 27 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

மணிலா, டிச.27 - பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இரு இடங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். கிறிஸ்துமஸ் அன்று இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. 

   வடக்கு மணிலாவில் குடிசைப் பகுதியிலும், பழமையான  அடுக்குமாடி கட்டிடத்திலும் தீ விபத்து ஏற்பட்டது. குடிசைப் பகுதிக்கு தீயணைப்புப்படை  வீரர்கள் தாமதமாக வந்ததாகக் கூறி அவர்களுடன் அப்பகுதி மக்கள் மோதலில் ஈடுபட்டனர். மேலும் ஒருவரை தீயணைப்பு வீரர் என்று கருதி அவரைக் கொன்றுவிட்டனர். மிகவும் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், அங்கு செல்ல தாமதம் ஏற்பட்டது. தீயணைப்புப் படை வீரர்கள்  தங்களைப் பாதுகாத்துக்

கொள்ளவே போராட வேண்டியிருந்தது என்று தீயணைப்புத் துறை அதிகாரிதள் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி பல வீடுகளில் அதிக அளவு  மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மின் கசிவு எற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்