முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு திரும்பினார் நெல்சன் மண்டேலா

சனிக்கிழமை, 29 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

ஜோகன்ஸ்பர்க், டிச. 29 - கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா(94) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் ஜோகன்ஸ்பெர்க்கில் உள்ள பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்காக கிறிஸ்துமஸ் தினத்தன்று விரைவில் குணமடைய சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் வீடு திரும்பிய அவர் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடவுள்ளார். இருப்பினும் அவர் மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 27 ஆண்டுகள் அரசியல் கைதியாக சிறையில் இருந்த மண்டேலா, சுதந்திரம் பெற்ற தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபராக பதவியேற்றார். 2004 ம் ஆண்டில் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்